புனரமைக்கப்பட்டஇ -சேவை மையம்..அமைச்சர் ஐ.பெரியசாமி திறந்து வைத்தார்!

Loading

ஒட்டன்சத்திரத்தில் புனரமைக்கப்பட்டஇ -சேவை மையத்துடன் கூடிய சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை ஊரக வளர்ச்சிதுறை அமைச்சர் திறந்து வைத்தார்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் புனரமைக்கப்பட்ட இ- சேவை மையத்துடன் கூடிய 89.33 லட்சம் மதிப்பீட்டில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு விழா உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி முன்னிலையில் ஊரக மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர்
ஐ.பெரியசாமி புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார்.

திறப்பு விழா திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் செ.சரவணன் தலைமையில் நடைபெற்றது. இதில்திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சச்சிதானந்தம், வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்தி ராஜன்,பழனி கோட்டாட்சியர் ஆர்.சக்திவேல்,ஒட்டன்சத்திரம் நகராட்சி ஆணையாளர் ஸ்வேதா,
ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் பழனிச்சாமி,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் காமராஜ்,வடிவேல் முருகன், ஒட்டன்சத்திரம் நகர் மன்ற தலைவர் க.திருமலைச்சாமி, துணை தலைவர் ப.வெள்ளைச்சாமி, மாவட்ட தி.மு.க அவைத் தலைவர் தி.மோகன்,மத்திய கூட்டுறவு சங்க தலைவர் ராஜாமணி,ஒன்றிய செயலாளர்கள் இரா.ஜோதீஸ்வரன், க.தர்மராஜ்எஸ்.ஆர்.கே.பாலு ஒன்றிய அவைத்தலைவர் செல்வராஜ்,நகர அவைத்தலைவர் சோமசுந்தரம், ஒன்றிய துணை செயலாளர்கள், கே.வி..முருகானந்தம், ராமசாமி,சிவா, உள்ளிட்ட முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள்,அரசு அதிகாரிகள் கழக பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

0Shares