54 பயனாளிகளுக்கு ரூ.74.78 இலட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி..நீலகிரி மாவட்ட ஆட்சியர் வழங்கினார்!

Loading

நீலகிரி மாவட்டம், பந்தலூர் வட்டம், உப்பட்டி பாரத மாதா மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு அவர்கள் கலந்து கொண்டு, 54 பயனாளிகளுக்கு ரூ.74.78 இலட்சம் மதிப்பில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இம்முகாமில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது :-மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, ஒவ்வொரு மாதமும் மக்கள் தொடர்பு முகாம் மூலமாக அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் நேரடியாக கிராமப் பகுதிகளுக்கு சென்று அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் பொதுமக்களுக்கு தெரிவிப்பதோடு, தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குவதுதான் மக்கள் தொடர்பு முகாமின் முக்கிய நோக்கமாகும். அதன்படி இன்று நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், தமிழ்நாடு ஊரகம் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில், 3 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.22 இலட்சம் மதிப்பில் தொழில் தொடங்க வங்கிகடன் இணைப்பு பெறுவதற்கான ஆணைகளையும், வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில், 2 பயனாளிக்கு ரூ.2.08 இலட்சம் மதிப்பில் பவர் வீடர்களும், தோட்டக்கலைத்துறையின் சார்பில், ஒருங்கிணைந்த தோட்டக்கலை வளர்ச்சி இயக்கம் திட்டத்தின் கீழ், 3 விவசாயகளுக்கு ரூ 10.37 இலட்சம் மதிப்பில், மானிய விலையில் தொழில் மேம்பாடு செயவதற்கான ஆணைகளையும், வளமிகு வட்டார வளர்ச்சி திட்டம் சார்பில், 2 விவசாயகளுக்கு ரூ28,000/- ஆயிரம் மதிப்பில், மண் ஆய்வு செயவதற்கான உபகரணகளும், மாவட்ட முன்னோடி வங்கி சார்பில், 3 பயனாளிகளுக்கு ரூ.12.89 இலட்சம் மதிப்பில் கல்வி கடனுதவி பெறுவதற்கான ஆணைகளும் வழங்கப்படுகிறது.மேலும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில், நிதி ஆதரவு திட்டம் சார்பில், 1 பயனாளிக்கு ரூ24,000/- ஆயிரம் மதிப்பில் கல்வி உதவிதொகை பயிலவதற்கான ஆணைகளையும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில், 5 பயனாளிகளுக்கு ரூ.25 இலட்சம் மதிப்பில் முதமைச்சரின் விரிவான மருத்து காப்பீட்டுக்கான புதிய அட்டைகள், 5 பயனாளிகளுக்கு தலா ரூ.2,000/- வீதம் மொத்தம் ரூ.10,000/- மதிப்பில் ஊட்டச்சத்து பெட்டகங்களும், 5 பயனாளிகளுக்கு மருந்து பெட்டகங்களும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில், 10 பயனாளிகளுக்கு ரூ.50,000/- மதிப்பில் புதிய குடும்ப அட்டைகளும், 5 பயனாளிகளுக்கு ரூ.1.12 இலட்சம் மதிப்பில் இயற்கை மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகை பெறுவதற்கான ஆணையும், 5 பயனாளிகளுக்கு ரூ.5,000/-ஆயிரம் மதிப்பில் தற்காலிக இயலாமைக்கான உதவித்தொகை பெறுவதற்கான ஆணையும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், 2 பயனாளிக்கு ரூ.13,680/- மதிப்பில் மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரமும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் கிறிஸ்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியர்கள் மற்றும் பணியாளர்கள் நபர்களுக்கு நல வாரிய அடையாள அட்டைகளையும் 6T601 மொத்தம் 54 பயனாளிகளுக்கு ரூ.74.78 இலட்சம் மதிப்பில் அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. இதுபோன்று தமிழ்நாடு அரசு தொடர்ந்து பல்வேறு சிறப்பான திட்டங்களை அறிவித்து, அதனை மிகவும் சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறது. எனவே, தமிழ்நாடு அரசின் திட்டங்கள் குறித்து தெரிந்துக் கொண்டு பொதுமக்கள் பயன்பெற வேண்டும் எனவும், பொதுமக்களிடமிருந்து பெறப்படும் அனைத்து மனுக்களும் துறைச்சார்ந்த அலுவலர்களுக்கு அனுப்பி வைத்து, அதன்மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுபோன்று தமிழ்நாடு அரசு தொடர்ந்து பல்வேறு சிறப்பான திட்டங்களை அறிவித்து, அதனை மிகவும் சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறது. எனவே, தமிழ்நாடு அரசின் திட்டங்கள் குறித்து தெரிந்துக் கொண்டு பொதுமக்கள் பயன்பெற வேண்டும் எனவும், பொதுமக்களிடமிருந்து பெறப்படும் அனைத்து மனுக்களும் துறைச்சார்ந்த அலுவலர்களுக்கு அனுப்பி வைத்து, அதன்மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இம்முகாமில், மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், குன்னூர் சார் ஆட்சியர் / கூடலூர் வருவாய் கோட்டாட்சியர் (பொ) சங்கீதா அவர்கள், உதவி வன பாதுகாவலர் திரு.கருப்பையா, தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் ஷிபிலா மேரி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தயாளன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) இராதாகிருஷ்ணன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலர் திரு.சுரேஷ்கண்ணன், மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் திரு.பீட்டர் ஞானராஜ், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் குப்புராஜ், மாவட்ட சமூக நல அலுவலர் பிரவீணா தேவி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு (பொ) தீபா, பந்தலூர் வட்டாட்சியர் திருமதி சிராஜுன்னிஸா, உதவி திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) திருமதி ஜெயராணி, முன்னாள் கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் திராவிட மணி உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

0Shares