வாரிசு அரசியல், லஞ்சம்..தி.மு.கவை வசைபாடிய பிரசாந்த் கிஷோர்!
வளர்ச்சியில் தமிழ்நாடு முன்னணில் உள்ளது போல் அரசியல் ஊழலில் தமிழகம் மேலோங்கி உள்ளது என்றும் லஞ்சம், வாரிசு அரசியல் இல்லை என்றால் தமிழ்நாட்டின் வளர்ச்சி மேலும் சிறந்ததாக இருக்கும் என்று பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற த.வெ.க. இரண்டாம் ஆண்டு தொடக்க விழா கூட்டத்தில் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் பேசியதாவது:-த.வெ.க.விற்கு வியூகம் அமைக்க போவதில்லை என்றும் இது மாற்றத்திற்கான காலம் என பேசினார்.
மேலும் எனது வியூகம் தமிழக வெற்றிக் கழகத்திற்கும், சகோதரரும் நண்பருமான விஜய்க்கு தேவையில்லை என்றும் த.வெ.க. அரசியல் கட்சி அல்ல என்றும் பல லட்சம் பேர் இணைந்த இயக்கம் என பேசிய பிரசாந்த் கிஷோர்விஜய் ஒரு தலைவர் மட்டுமல்ல, அவர் தமிழ்நாட்டின் நம்பிக்கை நட்சத்திரம் என்று கூறினார்.
மேலும் தமிழக வெற்றிக் கழகம் விஜய் தலைமையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும்
தமிழக வெற்றிக் கழகத்தில் அதிக இளைஞர்கள் உள்ளனர் என்றும் உங்கள் பணியே உங்கள் வெற்றி என கூறிய பிரசாந்த் கிஷோர்தமிழ்நாடு மற்றும் மேற்குவங்கம் தேர்தலுக்கு பின்னர் வியூகவகப்பாளர் பணியில் இருந்து ஓய்வு பெற்றிருந்தேன் என தெரிவித்தார்.
மேலும் தமிழை கற்கவும், தமிழை பேசவும் அனைத்து முயற்சியும் எடுப்பேன் என்றும் தமிழகத்தின் வளர்ச்சி மாடல் இந்தியாவின் சிறந்த மாடல் என்றும் தமிழகத்தின் வளர்ச்சி மாடலை மற்ற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என்றும் அடுத்த வருடம் த.வெ.க. வென்ற பின்னர் உங்களில் பலர் சட்டசபையில் அமருவீர்கள் என பேசிய பிரசாந்த் கிஷோர் தமிழக வெற்றிக் கழக வெற்றிக்கு நன்றி சொல்ல தமிழகம் வரும்போது தமிழில் பேசுவேன் என தெரிவித்தார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர் வளர்ச்சியில் தமிழ்நாடு முன்னணில் உள்ளது போல் அரசியல் ஊழலில் தமிழகம் மேலோங்கி உள்ளது என்றும் லஞ்சம், வாரிசு அரசியல் இல்லை என்றால் தமிழ்நாட்டின் வளர்ச்சி மேலும் சிறந்ததாக இருக்கும் என்றும் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் தான் அரசியல் ஊழல் அதிகமாக உள்ளது என்றும் தமிழக மக்கள் மத அரசியலை வேரூன்ற விடமாட்டார்கள் என நம்புகிறேன் என்றும் பேசிய பிரசாந்த் கிஷோர் சுனில் கவாஸ்கர், கபில்தேவ் மட்டுமே விளையாடிக்கொண்டிருந்தால், தோனி, சச்சினின் ஆட்டம் எப்படி மக்களுக்கு தெரியவரும் என்றார்.