பந்தல் சாகுபடி முறையில் காய்கறி விவசாயம் செய்யும் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா அவர்கள் செய்தியாளர்களுடன் சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்தார்.

Loading

மதுரை மாவட்டம் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பந்தல் சாகுபடி முறையில் காய்கறி விவசாயம் செய்யும் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா அவர்கள் செய்தியாளர்களுடன் சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்தார்.
மதுரை மாவட்டம், கிழக்கு ஊராட்சி ஒன்றியம், உலகனேரி கிராமத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா அவர்கள், தோட்டக்கலைத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பந்தல் சாகுபடி முறையில் காய்கறி விவசாயம் செய்து வரும் பயனாளி குறித்து செய்தியாளர்களுடன் சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்து கலந்துரையாடினார். தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா அவர்கள் தெரிவிக்கையில்:-
மதுரை மாவட்டத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் மூலம் விவசாயிகளுக்கு பல்வேறு மானியத் திட்டங்கள் 2024-2025-ஆம் ஆண்டில் செயல்படுத்தப்படுகிறது. மதுரை மாவட்டத்தில் உள்ள 13 வட்டாரங்களிலும் TNHORTNET இணையதளம் மற்றும் UZHAVAN செயலி மூலமாகவும் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர்கள் அலுவலகம் மூலமாகவும் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம் (NADP) செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் 2024-25 ஆம் ஆண்டில் ரூ.18.00 இலட்சம் செலவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் முருங்கை பரப்பு விரிவாக்கம் செய்ய ஒரு எக்டருக்கு ரூ.10,000/- மானியமும், செடிவகை காய்களுக்கான நிரந்தர பந்தல் அமைக்க ஒரு எக்டருக்கு ரூ.3,00,000/- இலட்சம் மானியமும் மற்றும் ஒரு எக்டர் வாழைக்கு முட்டுக்
கட்டுதலுக்கு ரூ.25,000/- மானியமும் இத்திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது.
மதுரை மாவட்டம் கிழக்கு வட்டாரத்தைச் சேர்ந்த உலகனேரி கிராமத்தை சேர்ந்த பயனாளி தனது 8 ஏக்கர் தரிசு நிலத்தை பயன்படுத்தி காய்கறி விவசாயம் செய்து வருகிறார். இதில் 8 முதல் 10 வகையான காய்கறி விவசாயம் செய்து வருகிறார். குறிப்பாக, பந்தல் சாகுபடி முறையில் கோவக்காய், பாகல், பீர்க்கு, புடல், சுரைக்காய் என 5 வகையான காய்கறிகள்
தொடர்ச்சியாக பயிரிட்டு பயனடைந்து வருகிறார். இதற்காக, மதுரை கிழக்கு வட்டார தோட்டக்கலைதுறை சார்பாக தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம் 2024-25 (NADP)யில் 0.60 ஏர்ஸ் பந்தல் அமைத்து பயிரிடுவதற்கு மானியமாக ரூ.1,80,000/- வழங்கப்பட்டுள்ளது.மாறி வரும் காலத்திற்கேற்ப தோட்டக்கலைத்துறை மூலமாக 75% மானியத்தில் சொட்டுநீர்பாசனம் போன்ற நவீன தொழில்நுட்பங்களும் அமைக்கப்பட்டுள்ளதாகவும், பந்தல் சாகுபடி செய்வதால் தனக்கு ஆண்டு வருமானம் ரூ.3,35,000/- கிடைப்பதாகவும், செலவுபோக நிகர இலாபமாக ரூ.1,99,000/- கிடைக்கிறது எனவும் பயனாளி மகிழ்ச்சியுடன் தெரிவித்தாக மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா அவர்கள் செய்தியாளர் சுற்றுப் பயணத்தின்போது தெரிவித்தார். இந்த ஆய்வின் போது, தோட்டக்கலைத் துணை இயக்குநர் பிரபா அவர்கள் உடனிருந்தார்.
0Shares