ஆற்காட்டில் தமிழக வெற்றி கழகம் சார்பில் தந்தை பெரியாரின் 145 வது பிறந்தநாள் கொண்டாட்டம்!!!

Loading

ஆற்காட்டில் தமிழக  வெற்றி கழகம் சார்பில் தந்தை பெரியாரின் 145 வது பிறந்தநாள் கொண்டாட்டம்!!!

ராணிப்பேட்டை மாவட்டம் தமிழக வெற்றி கழகம் கட்சியின் சார்பில் தந்தை பெரியாரின் 145 வது   பிறந்த நாள் விழா பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி வெகு விமர்சையாக  கொண்டாடப்பட்டது. ஆற்காடு பேருந்து நிலையத்தில் நடைபெற்ற  இந்நிகழ்விற்கு மாவட்ட தலைவரும் வாலாஜா 3 வது வார்டு நகர மன்ற உறுப்பினருமான   பூக்கடை ஜி.மோகன் தலைமை தாங்கி பெரியாரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். ஆற்காடு பொறுப்பாளர் பி.வினோத் முன்னிலை வகித்து அனைவருக்கும்  இனிப்பு வழங்கினார். இதில்  கட்சியின் மாவட்ட, ஒன்றிய, நகர  பொறுப்பாளர்கள் ஏராளமானோர்  கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
0Shares