தமிழ்நாடு அரசின் மகத்தான மக்கள் திட்டத்திற்கு, தமிழக முதல்வரை நேரில் சந்தித்து, பெயிரா அமைப்பினர் நன்றி தெரிவித்தனர்!.

Loading

தமிழ்நாடு அரசின் மகத்தான மக்கள் திட்டத்திற்கு, தமிழக முதல்வரை நேரில் சந்தித்து, பெயிரா அமைப்பினர் நன்றி தெரிவித்தனர்!.

அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி அவர்களின் தலைமையில் மேற்கண்ட கூட்டமைப்பின் நிர்வாகிகள் ராஜசேகர், சந்திரசேகர், பாலசுப்பிரமணி, கார்த்திக், உதயகுமார் மற்றும் பிரியகாந்தன் உள்ளிட்டோர் இன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை, தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து, தமிழக அரசு கொண்டு வந்து நடைமுறைப்படுத்தியுள்ள ஆகச்சிறந்த அரும்பெரும் மகத்தான மக்கள் திட்டமான “ஆன்லைன் மூலம் உடனடி கட்டட திட்ட அனுமதி” திட்டத்திற்கு நன்றி தெரிவித்தனர்.

மேலும் தமிழக முதல்வரிடம்
மேற்கண்ட கூட்டமைப்பின் தலைவர் ஹென்றி பேசுகையில், தமிழகத்தின் தன்னிகரற்ற முதல்வராகிய தங்களின் சீரிய தலைமையின் கீழ், தங்களின் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையின்படி, தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் திருமிகு. சு.முத்துசாமி அவர்களின் முன்னெடுப்பில், திராவிட மாடல் ஆட்சியில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க முன்னோடி திட்டங்களை கொண்டு வந்து ஒற்றைச் சாளர முறையில், எளிய வகையில் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கி வருகிறது.

குறிப்பாக கடந்த 22.07.2024 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஆகிய தங்களால் தொடங்கி வைக்கப்பட்டுள்ள 2500 சதுரடி பரப்பளவு உள்ள மனையில் 3500 சதுரடி வரை, (2 அலகு) தரை தளம் மற்றும் முதல் தளம் வரை கட்டப்படும் கட்டிடங்களுக்கு “எங்கிருந்தும் எந்நேரத்திலும் இணையதளம் வாயிலாக ஒற்றைச் சாளர முறையில், பொதுமக்கள் வழங்கும் சுயசான்றிதழ் அடிப்படையில், உடனடி கட்டட திட்ட
அனுமதி (தானியங்கி முறையில் தாமாக) பெறும் திட்டம்” பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.

குறிப்பாக தற்பொழுது கட்டட திட்ட அனுமதி கோரி விண்ணப்பிக்கின்றவர்களில் கிராமப்புறங்களில் 72 சதவீதம் பொதுமக்களும், பேரூராட்சி பகுதிகளில் 77 சதவீதம் பொதுமக்களும், நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் 79 சதவீதம் பொதுமக்களும் இந்த  திட்டத்தின் மூலம் உடனடியாக  பயன்பெறுவார்கள்.

இதனால் அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டணங்களை தவிர்த்து வேறு எந்த விதமான வீண் விரயங்களும் பொதுமக்களுக்கு ஏற்படாது. உரிய கால நேரத்துடன் எல்லோரும் எளிய முறையில் அனுமதி பெற முடியும், சொந்த இல்லக் கனவுகள் நினைவாகும் வகையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும் கடன் பெற்று தங்களின் கனவு இல்லங்களை கட்டுவதற்கு பெரும் வாய்ப்பாக இந்த திட்டம் அமையும்! பொதுமக்கள் மத்தியில் பெருமளவில் கட்டட திட்ட அனுமதி குறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படும், இதன் மூலம் இனி வரும் காலங்களில் அனுமதியற்ற கட்டிடங்கள் உருவாகாத நிலை வரும். இதனால் துறைச் சார்ந்த அலுவலர்களுக்கு பெருமளவில் வேலை பளுவும் குறையும்.

மேலும் பெருமளவில் வணிக பயன்பாட்டிற்காக எங்களைப் போன்ற கட்டுனர்கள் மற்றும் அபிவிருத்தியாளர்களால், கட்டடத் திட்ட அனுமதி கோரி விண்ணப்பிக்கும் திட்டங்களுக்கும், முன்னெடுக்கும் திட்டங்களுக்கும் விரைவில் அனுமதி பெறுவதற்கு இது நல் வாய்ப்பாக அமையும்.

மாற்றியமைக்க வேண்டுகோள்!

மேலும் நகர்புறங்களில் மட்டும் இதனை தரைதளம் மற்றும் இரண்டு தளங்கள் என்கிற வகையிலும், 10 மீட்டர் உயரம் வரை அனுமதித்து, இரண்டு அலகுக்கு பதிலாக நான்கு அலகுகள் வரை அனுமதி பெறும் வகையில் அளவுகோளினை மாற்றியமைத்து நடைமுறைப்படுத்தினால் நகர்ப்புறங்களில் வீடு கட்டும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்ப்புக்குரிய  திட்டமாக இது அமையும்.

ஆகவே மேற்கண்ட வரலாற்று சிறப்புமிக்க பல முன்னோடி திட்டங்களை தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையில் கொண்டு வந்து, வெகுமக்கள் பயன்பெறும் வகையில் நடைமுறைப்படுத்தியமைக்காக, மேற்கண்ட எங்கள் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் சார்பில், மாண்புமிகு தமிழகத்தின் தன்னிகரற்ற முதல்வராகிய தங்களுக்கும், தங்களின் தலைமையின் கீழ், மக்கள் நலனில் அக்கறையோடு மிகச் சிறப்பாக செயலாற்றும், தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறைக்கும் உளம் நிறைந்த பாராட்டுகளையும், இதயபூர்வமான வாழ்த்துக்களையும், நெஞ்சம் நிறைந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டார்

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *