மழைநீர் வடிகால்வாயினை  சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்  இன்று திடீரென   ஆய்வு செய்தார் 

Loading

சென்னை மாநகராட்சி,
ராயபுரம் மண்டலத்தில்   1.11 கி.மீ. நீளத்தில்அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால்வாயினை  சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்  இன்று திடீரென   ஆய்வு செய்தார்

 கடந்த மூன்று நாட்களாகப் பெய்த மழையினால்  பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கவில்லை என்று  நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு  தெரிவித்தபடி எந்தப் பகுதிகளிலும் தண்ணீர் நிற்காமலும்,  ஒரு சில தாழ்வான பகுதிகளில் நிற்கும் மழைநீரும் ஒரு மணி நேரத்திலும் வடிந்துவிடுகிறது  என்று மாநகராட்சி  தெரிவித்துள்ளது சென்னை மாநகராட்சியில்  ஒருங்கிணைந்த கட்டளை மற்றும்  கட்டுப்பாட்டு அறையின் வாயிலாக 24 மணி நேரமும் மழை தொடர்பாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், மழை தொடர்பாக மக்களிடமிருந்து  வரும் புகார்கள் மீது உரிய நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 சென்னை மாநகராட்சியில் உள்ள 22 சுரங்கப் பாதைகளில் மழைநீர் எங்கும் தேங்கவில்லை என்றும்  மழை பெய்யும்போது ஓரிரு சுரங்கப்பாதைகளில் மழைநீர் சிறிது தேங்கினாலும் உடனடியாக மோட்டார் பம்புகள் மூலம் மழைநீர் வெளியேற்றுப்படுகிறது. என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர், .

சில பேருந்து நிலையங்கள் தாழ்வாக அமைந்துள்ளதால் மழைநீர் தேங்கினாலும்    மோட்டார் பம்புகள் அமைத்து மழைநீர் அகற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது, மாநகராட்சி மற்றும் நீர்வளத்துறை, நெடுஞ்சாலைத் துறை, சென்னை குடிநீர் வாரியம், சென்னை மெட்ரோ இரயில், மின்துறை, இரயில்வேதுறை ஆகிய  துறைகளுடன் ஒருங்கிணைந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு  ஒவ்வொரு வாரமும் ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்தப்பட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்   தெரிவிக்கப்பட்டுள்ளது,

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 கோவில்குளங்களும் 117 பொதுக்குளங்களும்  தூர்வாரப்பட்டுள்ளது என்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள்   மழைக்கால சிறப்பு  மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன என்றும்  சென்னை மாநகராட்சியில் வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு  அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் விழிப்புணர்வோடு களப்பணியாற்றி வருகிறார்கள் என கூடுதல் தலைமை செயலாளர் / ஆணையர் அவர்கள் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது, கூடுதல் ஆணையர் ஆர்.லலிதா, இணை ஆணையர்டாக்டர் ஜி.எஸ்.சமீரன், , வடக்கு வட்டார துணை ஆணையாளர். கட்டா ரவி தேஜா,தலைமைப் பொறியாளர் .எஸ்.ராஜேந்திரன்  ஆகியோர்  உடனிருந்தனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *