தமிழக அரசு பத்திரிக்கையாளர் குடும்பங்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்க வழி வகை செய்ய வேண்டும்.
மகளிர் உரிமைத் தொகை வழங்குவதில் பத்திரிக்கையாளர்களுக்கு சலுகைகள் வழங்க அனைத்துஇந்திய பத்திரிகை ஆசிரியர் & வெளியீட்டாளர் சங்கம் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை.
தமிழகத்தில் மகளிருக்கு தமிழ்நாடு அரசு தற்போது உரிமைத் தொகை வழங்கி வருவதை நாம் அறிவோம். வரவேற்க தக்கது அந்தத் திட்டத்தில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருப்பதை அறிகிறோம். அந்த வகையில் சமூகத்தில் பின்தங்கிய நிலையில் வாழ்ந்து வரும் பத்திரிக்கையாளர்கள் குடும்பத்தைச் சார்ந்த மகளிருக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்கவில்லை என்பது வருத்தமான ஒரு தகவலாக இருந்தாலும், தமிழக அரசு தாய் உள்ளத்தோடு பத்திரிகையாளர்கள் குடும்பத்தில் உள்ள மகளிர்க்கு அந்த உரிமைத் தொகை கிடைப்பதில்லை மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்றோர் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் சலுகை விலக்கினைபத்திரிகையாளர்கள் குடும்ப தலைவிகளுக்கும் வழங்கிட அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் & வெளியீட்டாளர் சங்கம் தமிழக அரசை வேண்டுகிறது. பொருளாதார ரீதியாக பின்தங்கி இருக்கும் பத்திரிகையாளர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைத்தால் சற்று ஆறுதலாக இருக்கும் என்பது உறுதி. எனவே தமிழக அரசு பத்திரிக்கையாளர் குடும்பங்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்க வழி வகை செய்ய வேண்டுகிறோம்.