அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை

Loading

சட்டபேரவை எதிர்கட்சித் துணை தலைவர் விவகார ம்  குறிந்து சபாநாயகர் தன்னுடைய முடிவை எழுத்து பூர்வமாக வழங்க வேண்டும் என அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை. விடுத்துள்ளனர்
இதுகுறித்து அக்கட்சியின் சட்டமன்ற கொறடா முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அளித்தபேட்டி
தமிழ்நாடு சட்டபேரவை கூட்டத்தொடர் அக்டோபர் 9 ஆம் தேதி கூட உள்ள நிலையில் சட்டப்பேரவையில் எதிர்கட்சித் துணை தலைவராக ஆர்.பி.உதயகுமாரை நியமனம் செய்ய வேண்டும், ஓபிஎஸ், மனோஜ் பாண்டியன் வைத்தியலிங்கம் ஆகியோர் இருக்கைகளை மாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து கடிதம் வழங்கினர்.
அதிமுக தரப்பில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன்,கே.பி.அன்பழகன்,பொள்ளாச்சி ஜெயராமன், சி.விஜயபாஸ்கர்,செல்லூர் ராஜூ,கடம்பூர் ராஜு, ஓ.எஸ்.மணியன் துணை கொறடா ரவி மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சபாநாயகர் அப்பாவுவை சந்தித்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்.
எதிர்கட்சித் துணை தலைவர் விவகாரம் தொடர்பாக மூன்றாவது முறையாக கடிதம் வழங்கியுள்ளோம் ,சட்டபேரவை விதிமுறை மரபு அடிப்படையிலும் எதிர்கட்சித்துணை தலைவராக ஆர்.பி. உதயகுமாரை நியமனம் செய்ய வேண்டும் சட்டப்பேரவையில் இருக்கைகளை மாற்றி அமைக்க வேண்டும் என தெரிவித்து உள்ளோம்,இதுவரை பினப்பற்றி வந்த மரபுகளை சபாநாயகர் பின்பற்றுவார் என நம்புகிறோம்.
இந்த விவகாரம் தொடர்பான மனு பரிசீலனையில் உள்ளது என சபாநாயகர் தெரிவித்தார் இந்த பேரவை கூட்டத்திற்கு முன்பு இது தொடர்பான முடிவை சபாநாயகர் எடுக்க வேண்டும் என்றும் எடுக்கும் முடிவை எழுத்து பூர்வமாக வழங்க வேண்டும் என தெரிவித்து உள்ளோம் என அவர் தெரிவித்தார்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *