முதன்மை மாவட்ட நீதிபதி (பொறுப்பு) திரு.மாதவ ராமானுஜம் அவர்கள் தலைமையில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடியில் 5 அமர்வுகளும், கோவில்பட்டியில் 2 அமர்வுகளும், திருவைகுண்டத்தில் 2 அமர்வுகளும், திருச்செந்தூர், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் மற்றும் சாத்தான்குளம் தலா ஒரு அமர்வு உட்பட ஆக மொத்தம் 13 அமர்வுகளில் சமாதானமாக செல்லக் கூடிய குற்றவியல் வழக்குகள், அனைத்து வகையான சிவில் வழக்குகள், மோட்டார் வாகன விபத்து நஷ்டஈடு வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், மணவாழ்க்கை சம்மந்தப்பட்ட வழக்குகள், வங்கி கடன் வழக்குகள் உள்ளிட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
மேற்படி தேசிய மக்கள் நீதிமன்றத்தில் நீதிபதிகள் மற்றும் காப்பீடு நிறுவன மேலாளர்கள், வங்கி மேலாளர்கள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், காவல் துறையினர், வழக்காடிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட வழக்குகளில் வங்கி வாராக்கடன் வழக்குகளில் 505 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு 335 வழக்குகள் தீர்வு காணப்பட்டது. அதன் மொத்த தீர்வு தொகை RS.15,81,77,939/-. மேலும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 2368 வழக்குகளில் Rs.2,45,77,530/- மதிப்புள்ள 2285 வழக்குகள் தீர்வு காணப்பட்டது.
ஆக மொத்தம் 2873 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு 2620 வழக்குகள் தீர்ப்பு பிறப்பிக்கப்பட்டது. அதன் மொத்த தீர்வு தொகை Rs.18,27,55,469/- (ரூபாய் பதினெட்டு கோடியே இருபத்தி ஏழு இலட்சத்து ஐம்பத்தி ஐந்தாயிரத்து நானுற்றி அறுபத்தி ஒன்பது மட்டும் /-) ஆகும் . தூத்துக்குடி மாவட்டத்தில்,தேசிய மக்கள் நீதிமன்றத்திற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் / சார்பு நீதிபதி (பொறுப்பு) திருமதி. A.Bismitha., M.A.,LLM., முதுநிலை நிர்வாக உதவியாளர் திரு.S.தாமரை செல்வம், இளநிலை நிர்வாக உதவியாளர் செல்வி.A.முத்து லெட்சுமி, பணியாளர்கள் T.பால் செல்வம் R.சத்யா பாண்டி மற்றும் திரு.M. சவரி முத்து ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தார்கள்.