நங்கநல்லூர் பி எம் மருத்துவமனையும் ஜுவிதம் அறக்கட்டளை இணைந்து செவிலியர் தின விழா
உலக செவிலியர் தின விழா
மே 12 உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு நங்கநல்லூர் பி எம் மருத்துவமனையும் ஜுவிதம் அறக்கட்டளை இணைந்து செவிலியர் தின விழாவினை மருத்துவமனையின் வளாகத்தில் கொண்டாடினர் மருத்துவமனையின் தலைமை நிர்வாக இயக்குனர்கள் டாக்டர் தியாகராஜன் திருமதி வசந்தரா தியாகராஜன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அலங்கரிக்கப்பட்ட செவிலியர்களின் அன்னை என்று அழைக்கப்படும் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அவர்களின் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட உருவ படத்திற்கு மெழுகுவர்த்தி ஏந்தி மருத்துவமனையின் செவிலியர்கள் செவிலியர் தின உறுதிமொழி ஏற்றனர் ஜீவிதம் அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர். திருமதி டாக்டர்.மேரி மெட்டில்டா.அவர்கள் மருத்துவமனை செவிலியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை அணிவித்து இனிப்புகளை வழங்கினார் அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் செல்வ இருதய தாஸ் அவர்கள் நன்றி கூறினார்.