கள்ளக்குறிச்சி மாவட்டம் அருகே உள்ள நரிமேடு பகுதியில் பெண்‌ உட்பட மூவர் கழுத்தறுத்து கொலை

Loading

கள்ளக்குறிச்சி மாவட்டம் அருகே உள்ள நரிமேடு பகுதியில் பெண்‌ உட்பட மூவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டு உள்ள நிலையில் உள்ளன.
கணவனை இழந்த பெண் மற்றும் 11 வயது சிறுவன் எட்டு மாத கைக்குழந்தை ஆகிய மூவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கள்ளக்குறிச்சி பகுதியில் ‌பெரும் பரபரப்பு.
கள்ளக்குறிச்சி மாவட்டம் அருகே உள்ள நரிமேடு பகுதியைச் சேர்ந்தவர் வளர்மதி ‌(35) இவரது கணவர் கடந்த பத்து மாதங்களுக்கு முன்னர் சாலை விபத்தில் உயிரிழந்தார்.இந்த நிலையில் வளர்மதி தனது 11 வயது மகன் தமிழரசன் மற்றும் எட்டு மாத கைக்குழந்தை கேசவன் ஆகியோருடன் தனியாக வீட்டில் வசித்து வருகிறார்.மேலும் வளர்மதி காய்கறி வியாபாரம் ஆட்டோவில் செய்து வருவதாக கூறப்படுகிறது ‌இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக வீட்டை விட்டு வெளியே யாரும் வரவில்லை எனவும் வீட்டில் துர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தினர் சந்தேகத்தின் பேரில் கள்ளக்குறிச்சி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வளர்மதி வீட்டிற்கு வந்துள்ளனர். உள்ளே சென்று பார்க்கையில் வளர்மதி மற்றும் அவரது 11 வயது மகன் தமிழரசன் மற்றும் எட்டு மாத கைக்குழந்தை கேசவன் ஆகியோர்‌ கழுத்தறுத்துக்கப்பட்டு மிளகாய் பொடி தூவி கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர்.தொடர்ந்து மூவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் சம்பவ இடத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ் அவர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த நிலையில் வளர்மதி மற்றும் 11 வயது சிறுவன் தமிழரசன் 8 மாத கைக்குழந்தை கேசவன் ஆகிய மூவரும் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக அவரது வீட்டில் மீட்கப்பட்ட சம்பவம் கள்ளக்குறிச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .மேலும் சம்பவ இடத்திற்கு கைரேகை மற்றும் தடவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *