தமிழக முதல்வருக்கு பத்திரிக்கையாளர் சார்பில் நன்றி.
தமிழக முதல்வருக்கு பத்திரிக்கையாளர் சார்பில் நன்றி.

உலகில் எந்த பகுதியில் இருந்தாலும் ஒரு தகவலை பரிமாறிக் கொள்வதற்கு பத்திரிக்கை மற்றும் ஊடகம் ஒரு முக்கிய செயலியாக இருந்து வருகிறது. அந்த வகையில் அந்த துறையில் பணியாற்றுகிற பத்திரிக்கையாளர்கள் மிகவும் நலிந்த நிலையில் தான் இருந்து வருகிறார்கள். அவர்களை ஊக்கப்படுத்தவும், அவர்கள் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படுத்தவும் பலமுறை தமிழக அரசுக்கு பல கோரிக்கைகளை வைத்து அவற்றை சீராக பெற்று வந்த நிலையில். நலிவடைந்த பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியமாக ரூபாய் 15000 உயர்த்த வேண்டும் என்று கோரிக்கையை அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்கம் வலியுறுத்தி வந்தது.
இந்த நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் செய்தித்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு பத்திரிகையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நலிவடைந்த பத்திரிகையாளர்கள் ஓய்வூதியம் ரூபாய் 10 ஆயிரத்திலிருந்து 12000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்கிற அந்த அறிவிப்பும், அதேபோல கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் குடும்ப ஓய்வூதியம் ரூபாய் 5 ஆயிரத்திலிருந்து 6000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்கிற இந்த புது அறிவிப்பும் பத்திரிக்கையாளர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்கத்தின் சார்பில்தமிழக முதலமைச்சர் அவர்களுக்கும்,செய்தித்துறை அமைச்சர் அவர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.