திமுக அரசை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

Loading

 காங்கிரஸ் கட்சி மற்றும் பாஜகவினர் இடையே நடந்த மோதல் விவகாரம்…. கைது செய்வதிலும் ஒரு தலைப்பட்சமாக நடந்து கொள்வதாக திமுக அரசை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்….
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள சாலையில் பாரதிய ஜனதா கட்சி அலுவலகம் முன்பு நேற்று இரு தினங்கள்  முன்பு காங்கிரஸ் கட்சியினருக்கும் பாஜகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலின் போது இருகட்சியினரும் மாறி மாறி  கல்வீசி தாக்கியதில்   மண்டை உடைப்பு போன்ற மோதல் சம்பவங்கள்  மிகப் பெரிய பரபரப்பை  ஏற்படுத்தியது . இந்த சம்பவத்தில் காவல்துறை சார்பில் இரண்டு தரப்பிலும் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது , பாரதிய ஜனதா கட்சி சார்பில் மூன்று பேரும் காங்கிரஸ் கட்சி சார்பில் இரண்டு பேர் உட்பட ஐந்துபேர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர் மேலும் 55 பேர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில் காவல்துறை ஒரு
 ஒரு தலைபட்சமாக நடவடிக்கைகள் எடுத்து வருவதாக கூறி பாரதிய ஜனதா கட்சி சார்பில் நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் பத்து இடங்களில் காவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக நாகர்கோவில் வேப்பமூடு பூங்கா சந்திப்பில் மாநில பொதுச் செயலாளர் பொன் பால கணபதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த மாலை நேர ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாவட்ட பொருளாளர் முத்துராமன் , தேவ் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை  எழுப்பி ஆர்ப்பாட்டதில்  ஈடுபட்டனர்.
 பாரதிய ஜனதா கட்சியின் இந்த ஆர்ப்பாட்டத்தால் மிக முக்கிய சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு மாற்றுபாதையில்  வாகனங்கள்  இயக்கப்பட்டது.
100 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
0Shares

Leave a Reply