தமிழக கராத்தே வீரர்களுக்கு ஒரு நாள் சிறப்பு பயிற்சி அளித்தார்*
சென்னையில் ஜப்பான் நாட்டின் உலக சிட்டோரியோ கராத்தே அமைப்பின் தலைவர், முதன்மை கராத்தே பயிற்சியாளர் ஜென்சோ இவாடா,தமிழக கராத்தே வீரர்களுக்கு ஒரு நாள் சிறப்பு பயிற்சி அளித்தார்*
சென்னை அடையாறில் உள்ள யூத் ஹாஸ்டல் விளையாட்டு அரங்கத்தில்,
இந்தியாவிலேயே அங்கீகரிக்கப்பட்ட சிட்டோ ரியோ அமைப்பு “அகில இந்திய சிட்டோ ரியோ கராத்தே அமைப்பு” அதன் கீழ் செயல்படும்
” தமிழக சிட்டோ ரியோ கராத்தே” அமைப்பின் சார்பாக ஜப்பான் நாட்டை சார்ந்த உலக சிட்டோ ரியோ அமைப்பின் தலைவர் ஜென்சோ இவாட்டா மூலம் பயிற்சி ஏற்பாடு செய்யும் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
இது குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் இவாட்டா அவர்கள் கூறுகையில், தமிழகத்தில் உள்ள கராத்தே வீரர்களுக்கு கராத்தே தற்காப்பு கலை உள்ள நுணுக்கங்கள் கற்றுக் கொடுப்பதற்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளதாகவும் அதில் ஒரு பகுதியாக தமிழக வீரர்களுக்கும் கற்றுக் கொடுக்க வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த பயிற்சி முகாமை மூத்த கராத்தே பயிற்சியாளர்கள் அருண் மச்சாயா, ஜேக்கப் தேவகுமார், அல்தாப் ஆலம் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.