மரபுசாரா எரிசக்தி மூலம் குறைந்த விலையில் மின்சாரம் தயாரித்து வழங்குவதற்கான ஆய்வு

Loading

மரபுசாரா எரிசக்தி மூலம் குறைந்த விலையில் மின்சாரம் தயாரித்து வழங்குவதற்கான ஆய்வு சென்னை IITயில் நடைபெற்று வருவதாக சென்னை ஐஐடியின் பேராசிரியர் அசோக்   ஜுன் ஜுன்வாலா கூறியிருக்கிறார் இன்று சென்னையில் பாஜக மாநில செயலாளர் அஸ்வந்தம்மன் ஏற்பாடு செய்திருந்த  பிரதமரின் மனதில் குரல் சிந்தனைகள் குறித்தகூட்டத்தில் கலந்து கொண்டு பேசிகையில்இதனை தெரிவித்தார்  மேலும் பேசுகையில்   இந்த துறையில் ஆய்வு மற்றும் அபிவிருத்தி மேற்கொள்ளூம் போது அரசியல் தலையீடு இருக்கக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டார்
40 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நமது விஞ்ஞானிகளின் நிலை வேறு தற்போது நம் நாட்டில் அதிக இளம் விஞ்ஞானிகள் இருப்பதால் சூரியசக்தி மற்றும் காற்றாலை சக்தியை பயன்படுத்தி அதிலிருந்து கிடைக்கும் மின்சாரத்தை கடை கோடி மலைவாழ் மக்களுக்கு கொடுப்பதன் மூலம் மலைவாழ் பகுதி மக்களுக்கும் மின்சாரம் தங்கு தடை இன்றி கிடைக்க வழிவகுக்கும் என்றார் ஐஐடியின் பேராசிரியர் ஜுன்ஜுன்  வாலா
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பிஜேபியின் மாநில செயலாளர் அஸ்வத்தம்மன் பிரதமர் திரு நரேந்திர மோடி தனது மனதின் குரல் நிகழ்ச்சியின் மூலம் அழிந்து வரும் நாட்டு நாய்கள் பாரம்பரியம் தற்போது தொடர்ந்து பாதுகாக்கப்பட்டு வருவதாகவும் அதேபோன்று
99 வது மனதின்குரல் நிகழ்ச்சியில் காஷ்மீரில் தாமரை மலர்களைப் பற்றி பேசி இருப்பதன் மூலம் தாமரை பூக்கள் ஏற்றுமதிக்கு அதிக வழிவகை ஏற்பட்டதுடன் அந்த பகுதி மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்கு உறுதுணையாக உள்ளது என்றார் பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சியை நாட்டில் உள்ள அனைத்து மக்களும் கொண்டாடப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். உடல்உறுப்பு தானம் செய்வது குறித்தும் அதனால் பல பேர் பயன் அடைவது குறித்தும் இந்தியநாட்டு பிரதமர் கூறியிருப்பது எங்களைப் போன்ற மருத்துவர்களுக்குஒரு வர பிரசாதம் என்றும் பொதுமக்கள் மத்தியில் இனி உறுப்பு தானம் செய்ய வேண்டும் என்ற  ஒரு மனநிலை ஏற்படும் என்றும் அவர் கூறினார் மேலும் உறுப்பு தானம் செய்யவும் பெறவும் நாட்டின் எந்த மூலையில் உள்ள மக்களும் பயன்பாடு வகைகளும் எந்த வயதினரும் உறுப்பு தானம் செய்யலாம் என்ற ஒரு அறிவிப்பு மருத்துவ உலகிற்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்துள்ளது என்றார்  லைப் லைன் மருத்துவமனை குழுமத்தின் நிறுவனர் மருத்துவர் ராஜ்குமார். தமிழகத்திற்கும் காசிக்கும் நெடும் தொடர்பு இருப்பதை பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய மனதின்குரல் நிகழ்ச்சியில் சுட்டிக் காட்டி இருப்பது தமிழர்களின் வாழ்க்கையில் எந்த அளவு அவருடைய சிந்தனைகள் ஈடுபட்டிருப்பதை எடுத்துக்காட்டுவதாகவும் அதேபோன்று சௌராஷ்ட்ராவிற்கும் தமிழகத்திற்கும் உள்ள தொடர்பை கொண்டாடுவோம் என்று சொல்லி இருப்பது தமிழ் சமூகத்தின் மீது அவருக்குள்ள ஈடுபாட்டை மீண்டும் மீண்டும் தமிழக மக்களின் மனதில் கொண்டு சேர்க்கிறது என்று பாரத் கியான் நிறுவனர் ஹரி கூறியிருக்கிறார். நிகழ்ச்சியில் பேசிய வாசன் ஸ்டேட்டின் நிறுவனர் ரவி முருகையா 370 வது அரசியல் சாசன பிரிவு காஷ்மீர் மாநிலத்தின் வளர்ச்சிக்கு ஒரு  முட்டுக்கட்டையாக இருந்ததாகவும் அதை பிரதமர் நரேந்திர மோடியின் அரசு நீக்கி இருப்பது மூலம் அந்தப் பகுதியில் அனைத்து துறைகளிலும் நேரடியாக வளர்ச்சி ஏற்பட்டுள்ளதை நாம் நேரடியாக காண முடிந்ததாக கூறினார் இந்த நிகழ்ச்சியில் இந்த நிகழ்ச்சிகள் கார்ட்டூனிஸ்ட் வர்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர் இந்த சிந்தனையாளர் கூட்டத்திற்கு கட்சி பாகுபாடு இன்றி பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர் பிரதமரின் மனதின் குரல் சிந்தனைகள் ஒரு புதிய தொடக்கம் என்றும் இது போன்ற தொடக்கம் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் நடைபெற வேண்டும் என்றும் அதிலும் குறிப்பாக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும்  கட்சி பாகுபாடு இன்றி நடைபெற இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூட்டத்திற்கு வந்திருந்த சிந்தனையாளர்கள் கேட்டுக்கொண்டனர்
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *