மருத்துவமனையில் மருத்துவர் மற்றும் செவிலியர் உறங்கும் ஃபோட்டோ வைரல் :
திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை தற்போது நவீனமாக்கப்பட்ட 5 மாடி கட்டிடத்தில் இயங்கி வருகிறது.இந்த அரசு மருத்துவக் கல்லூரியின் மருத்துவமனையில் 500-க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகளை கொண்டு அவசர சிகிச்சை பிரிவு, எலும்பு முறிவு பிரிவு, குழந்தைகள் சிறப்பு பிரிவு உள்பட அனைத்து பிரிவு சிகிச்சை மையமும் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று காலை நேரத்தில் தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் உறங்குவது போல் சமூக வலைத் தளங்களில் ஃபோட்டோ மற்றும் வீடியோ வைரலாகி வருகிறது வைரலாகி வருகின்றது. இரவு பணி முடிந்து கிளம்புவதற்காக காத்திருந்த போது உறங்கினார்களா என்பது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.