பள்ளியின் 25ஆம் ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் வெகுசிறப்பாக நடைபெற்றது.
சென்னை கொளத்தூர் ஜி.கே.எம் காலனி,வினோபாஜி நகரில் உள்ள ஶ்ரீ பாரத் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியின் 25ஆம் ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் வெகுசிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக சென்னை கொளத்தூர் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் எஸ்.லோகநாதன் மற்றும் கெளரவ விருந்தினராக ஜோதி எண்டர்பிரைசஸ் டி.கணேச மூர்த்தி,கரஸ்பாண்டட் பி.எம்.பழனிசாமி,தலைமை ஆசிரியை பி.பரிமளா,அட்வைசர் மாலா மீனாட்சிநாதன் ஆகியோர் விழாவை சிறப்பித்தனர்.
விழாவில் பள்ளி மாணவ மாணவியர்கள் பரத நாட்டியம்,நடனம்,நாடகம்,போன்ற கலை நிகழ்ச்சிகளை மேடையில் நிகழ்த்தி காட்டினர்.பங்குகொண்ட பள்ளி மாணவ மாணவியர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கபட்டது.விழாவில் ஜோதி எண்டர்பிரைசஸ் டி.கணேச மூர்த்தி பள்ளி நூலகத்திற்க்கு நன்கொடையா க புத்தகங்கள் வழங்கியது குறிப்பிடதக்கது.இதில் ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவ மாணவியர்கள் பலர் நிகழ்வில் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.