குருத்தோலை ஞாயிறு விழா 

Loading

கோவை  அனைத்து கிறிஸ்தவ மக்கள் ஒருங்கிணைப்பு நல மையம் சார்பில் கோவை புலியகுளத்தில் உள்ள புதிய தலைமை அலுவலகம் முன்பு ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு குருத்தோலை ஞாயிறு அன்று ஏழை எளிய தாய்மார்கள் 200 பேருக்கு அரிசி மற்றும் குடும்பத்திற்கு தேவையான அனைத்து காய்களும் வழங்கப்பட்டது. நிறுவனத் தலைவர் கோவை சி.எம்.ஸ்டீபன் ராஜ் தலைமை தாங்கினார். மாநில மகளிர் அணி தலைவி ஐ.கரோலின் விமலா ராணி, பணிமயமாதா அன்பிய பொறுப்பாளர் ஐ.பிரான்சினா, கௌரவ ஆலோசகர்கள் ஏ.லியோ பெர்னாண்டஸ்எம்.ஞான ஆனந்த் செயற்குழு உறுப்பினர் எஸ்.கிறிஸ்டி மோனிஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாஸ்டர் எம்.இயேசு ராஜன் ஜெபித்து அனைவரையும் வரவேற்றார். மாநில துணைத்தலைவர் பாஸ்டர் டாக்டர்
எம்.டபிள்யூ ராஜன் சிறப்பு செய்தி அளித்தார். கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில ஆட்சி மன்ற குழு உறுப்பினர் கோவை வடக்கு மாநகர் பொறுப்பாளர் மனிதநேய செம்மல் கே.வடிவேல் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஏழை எளிய தாய்மார்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். ஆக்னெஸ் பள்ளியின் தாளாளர் கல்வி சேவைக்காக சேவை சுடர் விருது பெற்ற எஸ்.சுரேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். பகுஜன் சமாஜ் கட்சியின் கோவை மாவட்ட பொதுச்செயலாளர்
தீ.தா.மாரிச்செல்வம், மூத்த பத்திரிகையாளர் பொற்காலம்
எஸ்.எம்.ராஜா, சிறுபான்மை கிறிஸ்தவ மக்கள் அமைப்பின் கோவை மாவட்ட துணைத்தலைவர் கோவை டிசில்வா, திமுக மகளிர் அணி பொறுப்பாளர் கே.ரம்யா என்ற மாலதி, இசை இளவல் எபினேசர், இம்மானுவேல், திமுக பிரமுகர் ஏ எஸ் ஜே குமார், கிறிஸ்தவ போராளி சாலமன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சவுரி பாளையம் கிளை தலைவர் துரை, மற்றும் அமுல் தாஸ் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். முடிவில் கோவை மாநகர மாவட்ட மகளிர் அணி தலைவி ஜி.ஜோஸ்பின் மெர்சி நன்றி கூறினார்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *