பக்கவாத சங்கத்தின் 16 வது தேசிய பக்கவாத மாநாடு
இந்திய பக்கவாத சங்கத்தின் 16 வது தேசிய பக்கவாத மாநாடு சென்னையில் இன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல் வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கிவைத்தார்
நாடு முழுவதிலும் இருந்து 600க்கும் மேற்பட்ட நரம்பியல் மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர் இம் மாநாட்டில் 6 வெளிநாட்டு அறிஞர்கள் உட்பட 50க்கும் மேற்பட்ட மருத்துவ நிபுணர்கள் உரையாற்றினார்
சென்னை. ஏப்ரல் 2.
ஐ.என்.எஸ்.சி. 2023 பற்றி டாக்டர். யு. மீனாட்சிசுந்தரம் கூறுகையில், “இந்தியாவில் இறப்பிற்கான இரண்டாவது மிகப் பெரிய காரணமாக பக்கவாதம் இருக்கிறது. உடல் செயல்பாட்டை முடக்குவதற்கான முக்கிய காரணமாகவும் இந்நோய் உள்ளது. நம் நாட்டில், 13 முதல் 21 விநாடிகளுக்கு ஒருமுறை, ஒருவருக்குப் பக்கவாதம் ஏற்படுகிறது என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வோர் ஆண்டும் சுமார் 15 முதல் 24 லட்சம் பேர் பக்கவாதத்தால் பாதிக்கப்படுகின்றனர். இருந்தாலும் நோய்த் தடுப்பு சார்ந்த மேம்பாடுகள், தீவிர சிகிச்சை, நரம்பியல் மறுவாழ்வுக்கான புதிய முறைகள் ஆகியவை பக்கவாதத்தால் ஏற்படும் சுமையை கணிசமாகக் குறைக்க உதவும்.
பக்கவாதம் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகள் சார்ந்த அறிவியல் ஆராய்ச்சியில் நரம்பியல் நிபுணர்கள் அடைந்துள்ள சமீபத்திய முன்னேற்றங்களைத் தெரிந்துகொள்வதற்கும், பக்கவாதத்தை நிர்வகிப்பதில் நரம்பியல் நிபுணர்களிடையே அறிவு மற்றும் அனுபவங்களைப் பரிமாறிக் கொள்வதற்கும், மேம்படுத்துவதற்கும், எளிதாக்குவதற்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.
சிறப்பு விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டார் . ஐ.என்.எஸ்.சி. 2023 ஏற்பாட்டுக் குழுவின் சார்பில் இந்திய பக்கவாத சங்கத்தின் தலைவர் டாக்டர் வி.ஜி. பிரதீப் குமார், சங்கத்தின் செயலாளர் டாக்டர் அரவிந்த் ஷர்மா, மெட்ராஸ் நியூரோ டிரஸ்ட்டின் தலைவர் டாக்டர் வி. நடராஜன், செயலாளர் டாக்டர் யு. மீனாட்சிசுந்தரம், பொருளாளர் டாக்டர் தீபக் அர்ஜூன்தாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்..
ஐ.என்.எஸ்.சி. 2023 பற்றி டாக்டர். யு. மீனாட்சிசுந்தரம் கூறுகையில், “இந்தியாவில் இறப்பிற்கான இரண்டாவது மிகப் பெரிய காரணமாக பக்கவாதம் இருக்கிறது. உடல் செயல்பாட்டை முடக்குவதற்கான முக்கிய காரணமாகவும் இந்நோய் உள்ளது. நம் நாட்டில், 13 முதல் 21 விநாடிகளுக்கு ஒருமுறை, ஒருவருக்குப் பக்கவாதம் ஏற்படுகிறது என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வோர் ஆண்டும் சுமார் 15 முதல் 24 லட்சம் பேர் பக்கவாதத்தால் பாதிக்கப்படுகின்றனர். இருந்தாலும் நோய்த் தடுப்பு சார்ந்த மேம்பாடுகள், தீவிர சிகிச்சை, நரம்பியல் மறுவாழ்வுக்கான புதிய முறைகள் ஆகியவை பக்கவாதத்தால் ஏற்படும் சுமையை கணிசமாகக் குறைக்க உதவும்.என்றார்