ஈரோட்டில் மகிளா காங்கிரஸ் சார்பாக தீப்பந்தம் ஏந்தி பேரணி

Loading

ஈரோடு:காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு 2 ஆண்டு தண்டனை விதித்து நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பு வழங்கியது. இதனைத்தொடர்ந்து ராகுல்காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரசார் ஆங்காங்கே ஆர்ப்பாட்டம், ரெயில் மறியல் போன்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த நிலையில் ராகுல் காந்தி மீது வழக்கு பதிவு செய்ததை கண்டித்தும், வழக்கை திரும்ப பெற வலியுறுத்தியும் தமிழ்நாடு மகிளா   காங்கிரஸ் மாநில தலைவி வழக்கறிஞர் சுதா ராமகிருஷ்ணன் அவர்களின் வழிகாட்டுதலின்படி ஈரோட்டில் மகிளா காங்கிரஸ் சார்பாக மாவட்ட மாநகர தலைவி ஞானதீபம் தலைமையில் தீப்பந்தம் ஏத்தி பேரணி நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மாவட்ட பொறுப்பாளர் திருச்செல்வம் முன்னிலை வகித்தார். மேலும் மாவட்ட சிறுபான்மை துறை துணை தலைவர் கே.என். பாஷா,மகிளா காங்கிரஸ் கட்சியின் ஈரோடு மாவட்ட பொறுப்பாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *