மஞ்சப்பை மற்றும் நெகிழி இல்லா விழிப்புணர்வு பிரச்சாரம்*

Loading

தருமபுரியில் மஞ்சப்பை மற்றும் நெகிழி இல்லா விழிப்புணர்வு பிரச்சாரம்*
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாவட்ட
நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் மீண்டும் மஞ்சப்பை மற்றும் நெகிழி இல்லா தருமபுரி விழிப்புணர்வு பிரச்சாரத்தின்ஒருபகுதியாக நெகிழி இல்லா தருமபுரி விழிப்புணர்வு தொடர் ஓட்டத்தினை மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.இந்த தொடர் ஓட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்
தொடங்கி மாவட்ட விளையாட்டு அரங்கம் தருமபுரியில் முடிவுற்றது. இதில் சுமார் 250 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் தடை செய்யப்பட்ட ஒரு முறையே பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய
பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை பயன்படுத்துவது குறித்த உறுதிமொழி மேற்கொள்ளப்பட்டது. மேலும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு மஞ்சப்பையுடன் கூடிய மரக்கன்றுகள் மாவட்ட ஆட்சியர்  பொதுமக்களுக்கு வழங்கினார்.
மேலும் தொடர் ஓட்டத்தில் பங்குபெற்று முதல் 5 இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டதுடன்,
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மஞ்சப்பைகள்
வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் கே.குணசேகரன்,
மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஆ.நித்ய லட்சுமி, உதவி பொறியாளர் பா.லாவண்யா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்
வெ.லோகநாதன், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்
கேசவகுமார், அரசு பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர்
பரமேஷ்வரன், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலர்கள்
உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள், கல்லூரி ஆசிரியர், ஆசிரியைகள், மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *