ராகுல் காந்தி மீது பொய் வழக்கு எம்.பி பதவி நீக்கம் :  கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டனஆர்ப்பாட்டம் 

Loading

ராகுல் காந்தி மீது பொய் வழக்கு எம்.பி பதவி நீக்கம் :  மோடி அரசை கண்டித்து இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கை ரத்து செய்யக் கோரியும் , அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறித்ததை கண்டித்தும்,  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் எஸ் பாஸ்கரன் மார்ச் 24 அன்று அறிக்கை வெளி யிட்டதை தொடர்ந்து பல மாவட்டங் களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. புதுக்கோட்டை மாவட்ட குழு சார்பில் மார்ச் 25 அன்று திலகர் கடலில் மோடி அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட் டம் நடைபெற்றது .மாவட்ட செயலாளர்கள் எம்.என். ராமச்சந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் ஆர் சொர்ணகுமார் , நகர செயலாளர் ராமேஸ்,  நகர துணைச் செயலாளர் ஜான்சன் , எஃப் ஐ டி யு மாவட்ட செயலாளர் சக்திவேல் , நகர செயலாளர் நாகூர் ஹனி , இளைஞர் மன்ற மாவட்ட செயலாளர் கலைய ரசன் மற்றும் திரளான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *