யோகா ஆசிரியர்கள் சங்கம் எச்சரிக்கை

Loading

யோகா ஆசிரியர்களுக்கு முறைப்படி அரசு பணிவழங்கவில்லை என்றால் கடுமையான போராட்டம் நடத்தப்படும் என தமிழக அரசுக்கு தமிழ்நாடு யோகா ஆசிரியர்கள் சங்கம் எச்சரிக்கை..தமிழ்நாடு யோகா ஆசிரியர்கள் சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் சென்னை நொளம்பூரில் நடைபெற்றது. மாநில பொதுச் செயலாளர் காசிநாததுறை தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து பல பெண் யோக ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இதில் அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் யோகா ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்பது போன்ற முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்திற்கு பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மாநில பொதுச் செயலாளர் காசிநாதுறை விளையாட்டுத்துறை மருத்துவத்துறை மற்றும் காவல் துறைகளில் யோகா பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் ஆனால் தமிழகத்தில் தோன்றிய கலை தமிழகத்தில் மிகவும் பின்தங்கி இருப்பது வருத்தம் அளிப்பதாகவும் மேலும் எனவே யோகா கலையை வளர்க்கும் வகையில் யோகா பயிற்சி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். எனவும் தங்களது கோரிக்கையை தமிழக அரசு ஏற்காவிட்டால் தமிழகம் முழுவதும் உள்ள யோகா ஆசிரியர்கள் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டங்கள் நடத்துவோம் என எச்சரிக்கை விடுத்தார்…

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *