கிருத்திகை முன்னிட்டு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பேருந்து நிலையத்தில் விதைகள் அறக்கட்டளை சார்பாக கிருத்திகை முன்னிட்டு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு உதவி ஆய்வாளர்கள் அமரேசன் மற்றும் சீனிவாசன், அன்னபூரணி டிரஸ்ட் நிறுவனத் தலைவர் ரவிச்சந்திரன் ஆகியவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். நிறுவனத் தலைவர் சுதாகர் தலைமை தாங்கினார். அவைத் தலைவர் முருகன், இணைச் செயலாளர் ஹேமலதா, துணைச் செயலாளர் இளங்கோவன் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் அனைவரையும் ஒருங்கிணைத்தார். இணை ஒருங்கிணைப்பாளர் விக்னேஷ் நன்றி உரையாற்றினார். இதில் பொதுக்குழு உறுப்பினர்கள் விஸ்வ கேதவ், முரளி, பாபு, விடுதலை சிறுத்தை கட்சி மணிவண்ணன், ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.