நாள் சுற்றுலாவாக வண்டலூர் உயிரியல் பூங்கா

Loading

ஆரம்பநிலை பயிற்சி மையங்களில் பயிற்சி பெறும் சிறப்பு குழந்தைகளுடன் சிறப்பாசிரியர்;கள் மற்றும் பராமரிப்பாளர்களுடன் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் வாயிலாக ஒரு நாள் சுற்றுலா சென்று வர அனுமதியளிக்கப்பட்டுள்ளதை  தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலிருந்து ஹோப் மனவளர்ச்சி குன்றியோருக்கான ஆரம்ப நிலை பயிற்சி மையத்தில் உள்ள 15 சிறப்பு குழந்தைகள்  மற்றும் லைப் எய்டு சென்டர் காது கேளாதோருக்கான ஆரம்பநிலை பயிற்சி மையத்தில் உள்ள 15 சிறப்பு குழந்தைகள் என மொத்தம் 30 சிறப்பு குழந்தைகளுடன் பெற்றோர்கள், சிறப்பாசிரியர்கள் மற்றும் பராமரிப்பாளர்களுடன் 7 நபர்களும், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் தலைமையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மூலமாக வண்டலூர் உயிரியல் பூங்கா சென்று வருவதற்காக மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலகம் சார்பாக தயார் செய்யப்பட்ட வாகனத்தை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து வழியனுப்பி வைத்தார்.
முன்னதாக, அச்சிறப்பு குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் கலந்துரையாடி, அச்சிறப்பு குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கி, பெற்றோர்கள், சிறப்பாசிரியர்கள் மற்றும் பராமரிப்பாளர்களுடன் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு சென்று வருவதற்கு வழியனுப்பி வைத்தார்.இதில்  மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ச.பாபு, முடநீக்கு வல்லுநர் ஆஷா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துரையாடினார்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *