மருத்துவ சங்கத்தின் சார்பில் கிராமங்களுக்கு மருத்துவ பணி
விழுப்புரம் அருகே மருத்துவ சங்கத்தின் சார்பில் கிராமங்களுக்கு மருத்துவ பணியை விரிவுபடுத்துவோம் வாருங்கள் மாவட்ட ஆட்சியர் பழனி பேச்சு மருத்துவ சங்கத்தின் சார்பில் விழுப்புரம் மாவட்டத்தில் கிராமத்திற்கு செல்வோம் வாருங்கள் என்ற திட்டத்தில் கருங்காலிபட்டு கிராமத்தில் நடைபெற்ற மாபெரும் இலவச மருத்துவ முகாமை மாவட்ட ஆட்சியர் சி .பழனி
அவர்கள் குத்து விளக்கு ஏற்றி துவங்கி வைத்தார். அவர் பேசுகையில் அனைத்து கிராமங்களிலும் மருத்துவ சேவையை விரிவுபடுத்தி தினந்தோறும் சுகாதாரப் பணியாளர்கள் செல்ல வேண்டும் கிராம மக்களின் என்னென்ன குறைபாடுகள் அறிந்து அவர்களுக்கு வேண்டிய மருத்துவ சேவையை விரிவுபடுத்தி குணம் ஆகும் வகையில் மருத்துவர்கள் பணியாற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார் நிகழ்ச்சியின் போதுமரு பொற்கொடி மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் அவர்கள் முன்னிலை வகித்தார்.இந்த முகாமில்இந்திய மருத்துவ சங்கத்தின் விழுப்புரம் மாவட்டத்தின் தலைவர் மருத்துவர்கள் சங்கத் தலைவர்
தங்கராசுசெயலாளர் சௌந்தர்ராஜன்பொருளாளர் செல்வகுமார் மற்றும் சங்கத்தின் மருத்துவர்கள் மற்றும் பெண் மருத்துவ சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்ஊர் பொதுமக்கள் 500 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு
பயனடைந்தனர் .முகாமில் இரத்த அழுத்தம் இரத்த சர்க்கரை இரத்த சோகை புற்றுநோய் பரிசோதனைகள் மற்றும் பல்வேறு நோய்களுக்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டது இந்த முகாமிற்குகருங்காலிபட்டு ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன் அவர்கள் ஏற்பாடு செய்தார்.மருத்துவ முகாமில் மாவட்ட ஆட்சியர் பழனி பேசிய போது எடுத்த படம்