ஸ்ரீ நாராயணி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம்

Loading

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தோப்புக்கான நகராட்சி வடக்கு உயர்நிலை பள்ளியில் வேலூர் ஸ்ரீ நாராயணி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் ஆற்காடு மகாவீர் சூப்பர் மார்க்கெட் மற்றும் ஆற்காடு கோட்டை ரோட்டரி சங்கம் இணைந்து நடத்திய மாபெரும் இலவச இருதய மற்றும் கண்காரி சோதனை முகாம் சிறப்பாக நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்கு கோட்டை ரோட்டரி சங்கத் தலைவர் ஜெயசிங் தலைமை தாங்கினார் இணைச் செயலாளர் வீரபாண்டியன் முன்னிலை வகித்தார் பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி அனைவரையும் வரவேற்றார் இதில் இருதய நோய் சிறப்பு மருத்துவர் அரவிந்த் யுவராஜ் அவர்கள் தலைமையில் மருத்துவக் குழுவினரால் நெஞ்சு வலி மூச்சு திணறல் அதிக இதயத்துடிப்பு உயர் ரத்த அழுத்தம் இருதய வாழ்வு பிரச்சனை பிறப்பு முதல் இருதய நோய் இருதய ரத்தக்குழாய் அடைப்பு இசிஜி எக்கோ போன்ற அனைத்து பரிசோதனைகளும் நடத்தப்பட்டது. மேலும் ஆற்காடு கோட்டை ரோட்டரி சங்கம் மற்றும் சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை, ராணிப்பேட்டை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து நடத்திய கண் பரிசோதனை முகாம் சிறப்பாக நடைபெற்றது. இதில் பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட பொது மக்கள்  கலந்து கொண்டு பயனடைந்தனர். இதில் சாசன தலைவர் இறைமொழி, முன்னாள் தலைவர்கள் அசாதுல்லா, பூபாலன், சங்க உறுப்பினர்கள் அமுதா சக்திவேல், சக்திவேல், பாலாஜி, ஜார்ஜ், ஜனார்த்தனன், பள்ளி தலைமையாசிரியர் ரமேஷ் பாபு மற்றும் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர். இறுதியில் முன்னாள் சங்கத் தலைவர் பால நாகராஜன் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *