பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் பேட்டி :

Loading

திருவள்ளூர் மேற்கு ஒன்றியம், காக்களூர் ஊராட்சியில் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் புதிய நூலக கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. ஒன்றிய கவுன்சிலர் த.எத்திராஜ் தலைமை தாங்கினார்.  இதில் மாநில ஆதிதிராவிடர் நலக்குழு செயலாளரும் பூந்தமல்லி எம்எல்ஏ.வுமான ஆ.கிருஷ்ணசாமி, திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர்  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நூலக கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய கழக செயலாளர் ஆர்.ஜெயசீலன், ஒன்றிய குழு தலைவர் ஜெயசீலி ஜெயபாலன், துணை தலைவர் பர்கத்துல்லாகான், நரேஷ்குமார், தென்னவன், கே.கே.சொக்கலிங்கம், த.சுகுமார், டி.கே.பூவண்ணன், எஸ்.என்.குமார், உள்ளிட்ட திமுக மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள்.கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர்,  பால் உற்பத்தியாளர்கள் சங்க போராட்டத்தால் பால் விநியோகத்தில் எந்த பாதிப்பும் இல்லை. தமிழகத்தில் ஆவின் பால் தட்டுப்பாடின்றி சீரான முறையில் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார் . மேலும்  தமிழகம் முழுவதும் ஆவினில் 9354 பால் உற்பத்தியாளர்கள் சங்கம் பதிவு செய்யப்பட்டு இயங்கி வருகிறது.  அதில் ஒரே ஒரு சங்கம் மட்டும் தன்னை சந்தித்து பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டுமென கோரிக்கை வைத்தது.
இரண்டு மாதத்துக்கு முன்பு தான் கொள்முதல் விலையை மூன்று ரூபாய் உயர்த்தி கொடுக்கப்பட்டது.  மீண்டும் பால் கொள்முதல் விலை உயர்த்தி தர அவர்கள் கோரிக்கை வைத்திருக்கின்றனர். அவர்கள் கோரிக்கை முதல்வரிடம் எடுத்துக் கூறி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், ஒரே ஒரு பால் சங்கம் மட்டும் ஆவின் நிறுவனத்திற்கு பால் அனுப்ப மாட்டோம் என தெரிவித்திருக்கின்றனர்.பால் உற்பத்தியாளர்கள் சங்க போராட்டத்தால் எந்தவித பாதிப்பும் இன்றி  ஆவினுக்கு பால் வரத்து தொடர்ந்து  வந்து கொண்டு இருக்கிறது.  ஒரு நாளைக்கு 60 லட்சம் பால் பாக்கெட்டுகள் சீரான முறையில் தமிழகம் முழுவதும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.  உற்பத்தியாளர்கள் போராட்டத்தால் எந்தவித பாதிப்பும் இல்லாமல் தமிழக முழுவதும் ஆவின் மூலமாக சீராக விநியோகம் செய்யப்பட்டு வருவதாகவும் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *