12.94 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் பாலம் அமைக்கும் பணி
வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டம் மேல்பாடி ஊராட்சியில் பொன்னை ஆற்றின் குறுக்கே ரூபாய் 12.94 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் பாலம் அமைக்கும் பணியினை மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன், பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மேல் பாலாறு வடிநில கோட்டம் செயற்பொறியாளர் ரமேஷ், உதவி செயற் பொறியாளர் கோபி, உதவி பொறியாளர் சிவசங்கரன், காட்பாடி வட்டாட்சியர் ஜெகன்நாதன், உள்பட பலர் உடன் இருந்தனர்.