மக்களை தேடி மனுக்கள் பெறுதல்

Loading

மக்களை தேடி மனுக்கள் பெறுதல்”கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி, முருக்கம்பாடி ஊராட்சியில்கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் திரு.ஷ்ரவன்குமார் அவர்கள் தலைமையில், கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர், திரு.வசந்தம்.க.கார்த்திகேயன்அவர்கள் முன்னிலையில், மக்களை தேடி மனுக்கள் பெறுதல் முகாம் நடைபெற்றது.. தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர், எ.வ.வேலு அவர்கள், மக்களை தேடி மனுக்கள் பெறுதல் முகாமினைத் துவக்கி வைத்து பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி, பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது துரிதமாக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்து சிறப்புரையாற்றினார்..நிகழ்வில், அனைத்து அரசு துறைகள் சார்ந்த அனைத்து அலுவலர்களும் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களை பரிசீலனை செய்து மனுக்கள் மீதான செயல்பாட்டினை உடனடியாக தொடங்கினர்..கோரிக்கை மனுக்களோடு அரசு அலுவலகங்களுக்கு செல்ல வேண்டிய நிலையினை மாற்றி, அரசு அலுவலர்கள் தங்களை தேடி வந்து மனுக்கள் பெறும் நிகழ்வாக நடைபெற்ற “மக்களை தேடி மனுக்கள் பெறுதல்” முகாமினை ஏற்பாடு செய்த கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்டகழகசெயலாளர்,ரிஷிவந்தியம்சட்டமன்றஉறுப்பினர்,திரு.வசந்தம்.க.கார்த்திகேயன் அவர்களுக்கு, முருக்கம்பாடி ஊராட்சி பொதுமக்கள் நன்றிகளைத் தெரிவித்து மகிழ்ந்தனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *