ஐயப்பனுக்கு 108 சரணங்கள் சொல்லி பஜனை பாடல்கள் பாடி சிறப்பு பூஜை

Loading

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஜீவானந்தம் சாலையில் உள்ள ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தில் ஸ்ரீ ஹரிஹரசுதன் பக்த சபா அறக்கட்டளை சார்பில் 118ம் மாத ஐயப்பன் பிறந்த உத்திர பூஜை விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை தலைவர் மார்க்கபந்து குருசாமி தலைமை தாங்கினார். செயலாளர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். பொருளாளர் சாய்ராம் சீனிவாசன் அனைவரையும் வரவேற்றார். இதில் ஐயப்பனுக்கு 108 சரணங்கள் சொல்லி  பஜனை பாடல்கள் பாடி சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில் பொன்.கு.சரவணன், பழனி, தினேஷ், வாசு, அருண், ஜெய் மாருதி சரவணன், கண்மணி, பாண்டு மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் ஐயப்ப பக்தர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இறுதியில் அறக்கட்டளையின் ஆலோசகர் கணேசன் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *