சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Loading

சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து  ஆம் ஆத்மி கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்   – கடலூர் மாவட்டம் பண்ருட்டி தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில்  மத்திய அரசின் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  மண்டல தலைவர் இயன்முறை மருத்துவர்  தேவக்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட மகளிர் அணி செயலாளர் கௌரி பாபு, மாவட்ட துணை செயலாளர்கள் பாக்யராஜ், பத்மநாபன், கிங்ஸ்டார், கனிஷ்கர், கிழக்கு மாவட்ட  மகளிரணி   ஷர்மிளா பர்வீன், மாவட்ட செயலாளர் ரமேஷ்  முன்னிலை வகித்தனர். சிலிண்டர் விலை உயர்வால் ஒவ்வொரு குடும்பத்திலும் பெரும் செலவுகள் அதிகரித்து மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே போர் கால அடிப்படையில் மத்திய அரசு விலை உயர்வை குறைக்க வேண்டும்  என கண்டன கோஷம் எழுப்பினர். வணிக பிரிவு ராமு,  பண்ருட்டி தொகுதி பாபு, நெய்வேலி ஞானராஜ், திட்டக்குடி செந்தில், விருதாச்சலம் வெண்ணிலா மகளிர் அணி, திட்டக்குடி ஒன்றிய செயலாளர் வேலாயுதம், அண்ணாகிராம ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், நெய்வேலி ஒன்றிய செயலாளர் சுவாமிநாதன்,  வேப்பூர்  ஒன்றிய மனித உரிமைகள் சுவாமிநாதன், பிரேமா துதா, இளையமதி, சுவேதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *