ஜெ.எல். ஈஸ்வரப்பன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று திறந்து வைத்தார்
ஆற்காடு பேருந்து நிலையம் அருகில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக மாங்காய் மண்டியினை ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல். ஈஸ்வரப்பன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு வார்டு கவுன்சிலர் ஆனந்தன் தலைமை தாங்கினார். நகர மன்ற தலைவர் தேவி பென்ஸ் பாண்டியன், நகர மன்ற துணைத் தலைவர் பவளக்கொடி சரவணன் முன்னிலை வகித்தனர். பொறியாளர் கணேசன் அனைவரையும் ஒருங்கிணைத்தார். கவுன்சிலர்கள் ராஜலட்சுமி துரை,விஜயகுமார் முன்னா, அனு அருண்குமார், பாவை பழனி மற்றும் மாங்காய் மண்டி கடை உரிமையாளர்களும் கலந்து கொண்டனர்.