ஒரு லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் 4 கம்ப்யூட்டர் ஊராட்சி மன்றத் தலைவர் உளுந்தை எம்.கே.ரமேஷ் வழங்கினார் :

Loading

 தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின் பிறந்த நாள் தமிழ்நாடு முழுவதும் திமுகவினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட உளுந்தை ஊராட்சியில் 1 முதல் 10 வ குப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சியில் உளுந்தை ஊராட்சி மன்றத் தலைவரும், திமுகவின் முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளருமான உளுந்தை எம்.கே.ரமேஷ் கலந்து கொண்டு பரிசும் நோட்டுப் புத்தகமும், இனிப்பும் வழங்கினார். அதனைத் தொடர்ந்து தனது சொந்த செலவில்  அந்த கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு ரூ.30 லட்சம் மதிப்பில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்காக  பூமி பூஜையும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு முதலமைச்சர் பிறந்த நாளை முன்னிட்டு பிரியாணியும் வழங்கினார். மேலும் பள்ளி மாணவர்களின் வசதிக்காக ரூ. 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 4 கம்ப்யூட்டரையும் வழங்கினார்.
0Shares

Leave a Reply