சட்ட ரீதியான தாக்கங்கள் என்ற தலைப்பிலான கருத்தரங்கம் கல்லூரியின் அரங்கத்தில் துவங்கியது.
சேலம் சென்ட்ரல் சட்டக்கல்லூரியில் தேசிய அளவிலான தற்கொலை பொருளாதாரம்,சமூகம்,அரசியல் மற்றும் சட்ட ரீதியான தாக்கங்கள் என்ற தலைப்பிலான கருத்தரங்கம் கல்லூரியின் அரங்கத்தில் துவங்கியது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக சினேஹா அறக்கட்டளையின் நிறுவனரும், மனநல துறை தலைவரும், தன்னார்வ சுகாதார சேவைகள், அடையாறு,சென்னை.மனநல மருத்துவருமான லக்ஷ்மி விஜயகுமார் அவர்களும்,மற்றும் மனநல ஆலோசகரும் தரு மருத்துவமனையின் தலைவருமான மருத்துவர். மோகன்ராஜ் அவர்களும் கலந்துகொண்டனர். இவ்விழாவில் தலைமையுரையை கல்லூரியின் தலைவரும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலின் இணைத்தலைவருமான த.சரவணன் அவர்கள் தனது உரையில்,இப்போதைய சூழலில் மாணவர்களில் பலர் பல்வேறுவிதமான போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ளமுடியாமல் அவர்களுக்கு தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் தற்போது அதிகரித்து வருகிறது என்றும்,தோல்விகள் மற்றும் ஏமாற்றங்களை தாங்கிகொள்ளமுடியாமல் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.என்றும் விரிவாக தனது தலைமை உரையில் கூறினார். இவ்விழாவில் சிறப்பு விருந்தினர் மருத்துவர் லஷ்மி
விஜயகுமார் அவர்கள் பேசும்போது ஆன்லைன் ரம்மி போன்ற நிதி இழக்கும் அபாயகரமான விளையாட்டுகளில் மக்கள் ஈடுபடுவதால் அதிகமான பண இழப்பு அபாயம் ஏற்படுகிறது, என்று கூறினார்.மருத்துவர் மோகன்ராஜ் அவர்களின் உரையில் தமிழ் காப்பியங்கள் மற்றும் சமயம் சார்ந்த சில நூல்களில் தற்கொலைகள் பற்றி குறிப்பிட்டிருப்பதை மேற்கோள் காட்டினார்.டாக்டர் மணியன் அவர்களின் ஆராய்ச்சி கட்டுரையை சான்றாக கூறினார்.மேலும் இதனை தொடர்ந்து கருத்தரங்கத்தின் நிறைவு விழாவாக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை மருத்துவ மேற்பார்வையாளரும், பொது அறுவை சிகிச்சை பேராசிரியருமான மருத்துவர் பி.வி.தனபால் அவர்கள் தனது உரையில் நாளொன்றுக்கு உலக அளவில் 8,00,000 தற்கொலைகள் நடந்து வருகின்றன.அதிலும் 20 சதவீதம் தற்கொலைகள் இந்தியாவில் நடக்கின்றது. என்றும் குறிப்பாக சேலத்தில் தினமும் ஒரு தற்கொலையாவது நடக்கின்றது.என்றும் கூறினார். தடயவியல் மருத்துவத்தலைவர் விநாயகா மிஷன்ஸ் மருத்துவ கல்லூரி பேராசிரியர் மருத்துவர் வள்ளிநாயகம் அவர்கள் தனது உரையில் அதிகமான தற்கொலைகள் கற்பழிப்புகளாலும் மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளினால் நிதி இழப்பு ஏற்படுத்தும் விளையாட்டுகளில் ஈடுபடுவதாளும் தான் ஏற்படுகிறது என்றும் கூறினார், தமிழ்நாடு முன்னாள் உதவி இயக்குனர்,தடய அறிவியல் துறை இயக்குனர் கே.பாரி அவர்கள் தனது உரையில் பல தற்கொலைகளை அவரது அனுபவத்தில் சந்தித்த வழக்குகள் மூலம் எடுத்துக்காட்டி எவ்வாறு நடந்தது இதற்கான காரணம் என்ன என்பதை விரிவாக கூறி இவ்விழாவில் கலந்து கொண்டு இவ்விழாவினை சிறப்பித்தனர்.இந்த தேசிய அளவிலான கருத்தரங்கத்தின் ஆய்வறிக்கையை கல்லூரியின் பேராசிரியர் டாகடர் பாலராமலிங்கம் அவர்கள் விழாவில் சமர்பித்தார்.இந்த தேசிய அளவிலான கருத்தரங்கத்தில் பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்த மாணவ,மாணவிகள். பேராசிரியர்கள்.மற்றும் சட்ட வல்லுநர்கள் 150 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.இவர்களில் 72 க்கும் மேற்பட்டவர்கள் ஆய்வுக்கட்டுரைகளை சமர்பித்துள்ளனர்.இதில் ஆய்வு குழு தலைவர்களாக முனைவர்.பூஜா சக்கரவர்த்தி, முனைவர்.ராஜவெங்கடேசன், முனைவர்.இந்திரா, முனைவர்.சரளா, முனைவர்.மெரசிலின் புஷ்பா,
முனைவர் சோழராஜா,ஆகியோர் சிறந்த ஆய்வு கட்டுரைகளை தேர்ந்தெடுத்தனர்.இதற்கான விரிவான ஏற்பாடுகளை கல்லூரியின் நிர்வாக இயக்குனர் மாணிக்கம், டீன் டாக்டர் கீதா,கல்லூரியின் முதல்வர் பேகம் பாத்திமா அவர்களும் செய்திருந்தனர்.கல்லூரியின் பேராசிரியை செல்வி நீராஜா அவர்கள் நன்றி உரையாற்றினார்.