25 விவசாயிகளுக்கு சுமார் ரூ.5 இலட்சம்மதிப்பில் தேயிலை பறிக்கும் இயந்திரம்
நீலகிரி மாவட்டம் குன்னூர் உப்பாசி கூட்டரங்கில் இண்டஸ்டவர்ஸ் மற்றும் வோட போன் பவுண்டேசன் இணைந்து நடத்தும் ஸ்மார்ட் அக்னி திட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் சா.ப.அம்ரித் அவர்கள் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து 25 விவசாயிகளுக்கு சுமார் ரூ.5 இலட்சம்மதிப்பில் தேயிலை பறிக்கும் இயந்திரம் மற்றும் விவசாய இடுப்பொருட்களை வழங்கினார்.உடன் தேயிலை வாரியம் செயல் இயக்குநர் முத்துகுமார் அவர்கள்,குன்னூர் வருவாய் கோட்டாட்சியர் பூஷணகுமார் அவர்கள், குன்னூர் வட்டாட்சியர் சிவக்குமார் அவர்கள்,முதன்மை செயல் அலுவலர் (இண்டஸ்டவர்ஸ்)ஜோசப்மோசஸ் அவர்கள் உட்பட பலர் உள்ளனர்.