சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக செய்தி அலசல் நாளிதழில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
சென்னை ராயபுரம் அரத்தூன் ரோடு வார்டு50ல் உருது பள்ளி சுவற்றின் பின்புறம் இடையே குப்பைகள்,கட்டுமான கழிவுகள்,சமூக விரோதிகள் மது அருந்திவிட்டு பாட்டில்களை வீசிவருவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக செய்தி அலசல் நாளிதழில் செய்தி வெளியிட்டிருந்தோம்.அதன் எதிரொலியாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கவனத்தில் கொண்டு பள்ளியின் பின்புறம் குமிக்கபட்ட குப்பைகளை அகற்றியுள்ளனர்.இதனை செய்தி வெளியிட்ட செய்தி அலசல் நாளிதழுக்கும் துரித பணி செய்த சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் நன்றியை தெரிவித்துள்ளனர்.அவ்விடத்தில் கட்டுமான கழிவுகள்,குப்பைகள் மற்றும் குடித்து விட்டு மதுபாட்டில்களை வீசுவோர்மீது கடும் நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.