அண்ணா எம்ஜிஆர் திராவிட மக்கள் கழகத்திற்கு மீண்டும் கடாய் சின்னம் 

Loading

அண்ணா எம்ஜிஆர் திராவிட மக்கள் கழகத்திற்கு மீண்டும் கடாய் சின்னம்
 வழங்கியதற்காக தேர்தல் ஆணையத்திற்கு நன்றி கூறினார்  நிறுவனத் தலைவர்
டாக்டர் முத்துராமன் சிங்கப்பெருமாள்
 சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள நிருபர்கள் சங்கத்தில் நடைபெற்ற  இப்பத்திரிக்கையாளர் சந்திப்பில்
 நடைபெற உள்ள  ஈரோடு இடைத் தேர்தலில்  எங்கள் கட்சியின் வேட்பாளர் வெற்றி பெற்றால்
  தொகுதி வாக்காளர்களுக்காக குரல் கொடுத்து நாங்கள் கொடுத்துள்ள தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்
அண்ணா எம்ஜிஆர் திராவிட மக்கள் கழகம் என்கிற எங்கள் கட்சி  2018 தலைமை தேர்தல் கமிஷனில் பதிவு செய்யப்பட்டு இதுவரை மூன்று முறை தேர்தலை கடாய் சின்னத்தில் சந்தித்து கணிசமான வாக்குகளை பெற்றுள்ளோம் இந்த முறை ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் எங்களுடைய வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அதிகாரி ஏற்றுக்கொண்டு எங்களுக்கு கடாய் சின்னத்தை மீண்டும் கொடுத்துள்ளார்  ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில்  எங்கள் கட்சியின் சார்பில் கோவில் அர்சகர் ஒருவரை  வேட்பாளராக நியமித்துள்ளோம்
என்றார்
மேலும் பேசிய அவர்
சாயக்கழிவு சுத்தகரிப்பு தொழிற்சாலை நவீன முறையில் அமைக்கப்படும்.
துணிகளுக்கு சாயம் ஏற்றும் தொழிற்சாலைகள் இயற்கைக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் நடைமுறையில் உள்ள இடையூறுகள் அகற்றப்பட்டு முறைப்படுத்தப்படும்.
போன்ற பல்வேறு கோரிக்கைளை நடைமுறைப்படுத்துவோம்  என்றார்
இந் நிகழ்ச்சியில் அண்ணா எம்ஜிஆர் திராவிட மக்கள் கழகத்தின் மாநில மாவட்ட பகுதி வட்ட கழக நிர்வாகிகள் மகளிர் அணி நிர்வாகிகள் இளைஞர் அணி நிர்வாகிகள்  பலர் கலந்து கொண்டனர்
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *