பாலக்கோட்டில் 7-கோடி ரூபாய் மதிப்பிட்டில் கட்டப்பட்ட காய்கறி பழங்கள் குளிர்பதன கிடங்கு மற்றும் வணிக கடைகள் திறப்பு.

Loading

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு  நகர் பகுதியில் தக்காளி, காய்கறி, பழங்கள் உள்ளிட்ட இதர அழுகும் தன்மையுள்ள உணவு பொருட்களை பதப்படுத்த வேளாண்மை விற்பனை ஒழுங்கு மையத்தின் சார்பில் முதன்மை பதப்படுத்தும் நிலையம், வே- பிரிட்ஜ், 12 வணிக கடைகள், குளிர்பதன கிடங்கு, விற்பனைக்கூடம் உள்ளிட்டவை 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழாவிற்காக காத்திருந்தது. உடனடியாக பயன்பாட்டிற்க்கு கொண்டு வர வேண்டும் என தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர் அதனை ஏற்று வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறை இயக்குநர் நடராஜன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.இந்நிகழ்ச்சியில் வேளான்மை துறை அதிகாரிகள் உழவர் இயக்க சுய உதவி குழு சங்கத்தினர், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *