முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்

Loading

முன்னாள் முதல்வர் முத்தமிழறிஞர் டாக்டர்.கலைஞர் வழியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக மக்களின் முன்னேற்றத்திற்காக எண்ணற்ற திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில், தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறையின் கீழ் பல்வேறு திட்டங்கள் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் ஒன்றாக, கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்கள் தங்களின் வீட்டு தோட்டங்கள் மற்றும் மாடிப்பகுதிகளில் காய்கறிகள், பழங்கள் மற்றும் மூலிகைப்பயிர்கள் பயிரிட்டு பயன்பெறும் விதமாக  முதலமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறி தோட்டம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை இயற்கை முறையில் மேம்படுத்த ஊட்டச்சத்து தழைகள் வழங்கும் திட்டம் தமிழ்நாடு முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டது.அதனடிப்படையில், திருவள்ளூர் மாவட்டத்தில் முதலமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறி தோட்டம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த ஊட்டச்சத்து தழைகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 2500 நகர்ப்பகுதி மக்கள் மாடி தோட்டம் அமைப்பின் மூலமும், கலைஞர் கிராம பஞ்சாயத்துக்களில் உள்ள நிலமற்ற விவசாய தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் காய்கறி தோட்டம் அமைப்பின் மூலம் 14100 நபர்களும் உணவே மருந்து என்ற திட்டத்தின் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி பல்வேறு நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ள மூலிகை தளைகள் மூலம் 300 நபர்கள் என இத்தகைய  முதலமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறி தோட்டம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த மூலிகை தழைகள் வழங்கும் திட்டத்தின் கீழ் திருவள்ளூர் மாவட்டத்தைச் சார்ந்த 16,900 நபர்கள் பயனடைய உள்ளனர்.திருவள்ளூர் மாவட்டத்தில் மாடி தோட்டம் அமைப்பின் கீழ் பயனடைந்த மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியம், பொன்னேரி பகுதியைச் சேர்ந்த மணிமேகலை  தெரிவித்ததாவது : தமிழ்நாடு முதலமைச்சர் வீட்டுகாய்கறி தோட்டம் அமைக்கும் திட்டத்தினை அறிவித்துள்ளார்கள். இந்த திட்டத்தினை பற்றி தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் எடுத்துரைத்தனர். இந்த திட்டத்தின் மூலம் வீட்டுக்காய்கறி தோட்டம் அமைக்க தேவையான 6 வகை காய்கறி விதைகள், செடிவளர்க்கும் பைகள் 6 எண்கள், இரண்டு கிரோ தென்னை நார் கட்டிகள் 6 எண்கள்.உயிர் உரங்கள் 400 கிராம், உயிரி கட்டுப்பாட்டு காரணிகள் 200 கிராம், இயற்கை பூச்சிக்கொல்லி 100 கிராம் ஆகியவைகளை வழங்கினார்கள். இவைகளை கொண்டு மாடியில் காய்கறி தோட்டம் அமைத்தேன். இவற்றிலிருந்து எனது குடும்ப தேவைக்குண்டான காய்கறிகள் கிடைக்கின்றது. ஆகையால், நாங்கள் காய்கறிகள் வெளியிலிருந்து வாங்குவதில்லை.குறைந்த வருமானத்தை கெண்டு குடும்பம் நடத்திவரும் என்னை போன்ற குடும்பத் தலைவிக்கு இந்த திட்டம் பெரிய அளவில் கைகொடுத்துள்ளது. அதுமட்டுமின்றி, நாம் விளைவித்த நல்ல காய்கறிகளை சமைத்து சாப்பிடுகின்றோம் என்ற மன நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது மாடித்தோட்டம் அமைக்கும் திட்டம். இந்த திட்டம் தந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.அதேபோல் திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியம், கும்மிடிப்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த காமராஜ் கூறுகையில், தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ள வீட்டுக்காய்கறி தோட்டம் மூலம் எனக்கு தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் காய்கறி தோட்டம் அமைப்பதற்கான விதைகள் மற்றும் மண்புழு உரம் போன்றவைகள் வழங்கினார்.நான் தனியாக எந்த வேலையும் இல்லாமல் இருந்த வந்த நிலையில் இந்த காய்கறி தோட்டம் அமைத்தேன். தற்போது இந்த காய்கறி தோட்டம் எனது குடும்பத்திற்கு நல்ல பயனை தருகின்றது. பல்வேறு இராசயணங்களை  கொண்டு வளர்க்கப்படும் காய்கறிகள் ஏதோ ஒரு வகையில் உடலுக்கு தீங்கினை ஏற்படுத்த வாய்ப்புகள் உள்ளது. அந்த வகையில் இயற்கையான முறையில் விளைவித்த பசுமையான காய்கறிகளை, தேவையான நேரத்தில் தேவைக்கேற்ப பறித்து சமையலுக்கு பயன்படுத்திக்கொள்வது மிகுந்த சந்தோஷத்தை தருகின்றது. உடலுக்கு ஆரோக்கியத்தையும் அளிக்கும் விதமாகவும் அமைகின்றது. அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறுகின்ற வகையில் பார்த்து பார்த்து திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வரும்  தமிழ்நாடு முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக மக்கள் வாழ்வில் முன்னேற்றமடைய அனைத்து துறைகளின் சார்பாகவும், பல்வேறு நலத்திட்டங்களை வகுத்து அத்திட்டம் முழுமையாக மக்களிடம் சென்றடைவதை உறுதி செய்து பணியாற்றி வருகின்றார் என திருவள்ளூர் மாவட்ட மக்கள் மனதார பாராட்டி வருகின்றனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *