ஏ.சி.எஸ்.மருத்துவ கல்லூரி மற்றும் டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி ஆராய்ச்சி மையம் இணைந்து நடத்திய மாபெரும் இலவச பொதுமருத்துவ முகாம்.
நேசம் சாரிடபுள் அறக்கட்டளை,ஏ.சி.எஸ்.மருத்துவ கல்லூரி மற்றும் டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி ஆராய்ச்சி மையம் இணைந்து நடத்திய மாபெரும் இலவச பொதுமருத்துவ முகாம்.சென்னை தண்டையார்பேட்டை சாரதா தேவி மெட்ரிக்குலேஷான் பள்ளி வளாகத்தில் நேசம் சாரிடபுள் அறக்கட்டளை,ஏ.சி.எஸ்.மருத்துவ கல்லூரி மற்றும் டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி ஆராய்ச்சி மையம் இணைந்து மாபெரும் இலவச பொதுமருத்துவ முகாமினை நடத்தியது.இம்முகாமில் நேசம் சாரிடபுள் அறக்கட்டளை பாண்டி செல்வம்,குழந்தைகள் நல மருத்துவ தலைவர் அரசர் சீராளர் ஆகியோர் ஆதரவில் இம்முகாம் வெகு சிறப்பாக நடைபெற்றது.இம்மருத்துவ முகாமில் பொதுமருத்துவம்,மகப்பேறு மருத்துவம்,கண் மருத்துவம்,பல் மருத்துவம்,காது,மூக்கு,தொண்டை மருத்துவம்,எழும்பியல் மருத்துவம்,அறுவை சிகிச்சை மருத்துவம்,இ.சி.ஜி,இரத்த அழுத்தம்,சர்கரை நோய் பரிசோதனை போன்ற மருத்துவங்கள் சிறந்த மருத்துவர்களால் மருத்துவம் பார்க்கபட்டு பொதுமக்களுக்கு இலவசமாக மருந்துகள் வழங்கபட்டது.இதில் பல்வேறு பகுதியில் இருந்து பொதுமக்கள் வருகைதந்து பயண்பெற்றனர்.