வில்லியனூர் புனித லூர்து அன்னை ஆண்கள் பள்ளியில் எளிய முறையில் ஆங்கிலம் பயிற்சி.

Loading

வில்லியனூர் புனித லூர்து அன்னை ஆண்கள் அரசு நிதி உதவி பெறும் உயர்நிலைப் பள்ளியில் செயல்படும் சமுதாய நலப்பணி திட்டம் சார்பில் தன்னார்வலர்களுக்கு எளிய முறையில் ஆங்கிலப் பயிற்சியும், பள்ளி வளாக தூய்மை செயல்பாடுகள் நடைபெற்றன. பள்ளி தலைமை ஆசிரியர் அருட்திரு ஜோசப் சகாயராஜ் அடிகளார் தலைமை தாங்கினார். பள்ளி தாளாளர் அருட்திரு பிச்சைமுத்து அடிகளார் முன்னிலை வகித்தார். திட்ட அலுவலர் சிவனேசன் நோக்க உரை ஆற்றினார். இதில் பயம் இல்லாமல் முயற்சியும், தொடர் பயிற்சியும், தேடலும் இருந்தால் எளிய மொழியாகிய ஆங்கிலத்தை எளிதில் கற்கலாம். உலகப் பொது மொழியாகிய ஆங்கிலத்தை அவசியம் கற்க வேண்டும் என வலியுறுத்தி பயிற்சி வகுப்பு எடுத்தார் செவன் ஏஞ்சல்ஸ் நிறுவனர் ஜாக்ஷன்.  பயிற்சி வகுப்பின் இடையிடையே கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்த தன்னார்வலர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. மூத்த ஆசிரியர் ரெங்கநாதன் நன்றி கூறினார். மாலையில் பள்ளி சுற்றுப்புறத் தூய்மை பணியில் தன்னார்வலர்கள் ஈடுபட்டனர்.
0Shares

Leave a Reply