செஞ்சியில் மினி மாரத்தான் ஓட்டம்.

Loading

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் இந்திய ஒற்றுமையை வலியுறுத்தியும், இயற்கை வளங்களை பாதுகாக்க வலியுறுத்தியும் மாபெரும் மாரத்தான் ஓட்டப்பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
செஞ்சிக்கோட்டை ரோட்டரி சங்கம், தரணிதண்டபாணி சி.பி.எஸ்.சி பள்ளி மற்றும் கன்னிகா அறக்கட்டளை வாசவி மினிமாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் செஞ்சியை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். செஞ்சியை அடுத்த மேலச்சேரியில் தொடங்கி செஞ்சி தரணிதண்டபாணி பள்ளியில் முடிவடைந்தது சுமார் 7 கிலோமீட்டர் தூரம் மாணவர்கள் மாரத்தான் ஓட்டத்தில் கலந்துகொண்டு ஓடினர்.  கன்னிகா சாரிட ஓட்டப்பந்தயத்தை  கன்னிகா அறக்கட்டளை தலைவர் ரமேஷ்பாபு வரவேற்றார். போக்குவரத்து காவல் ஆய்வாளர் அப்பாண்டைராஜன் முன்னிலை வகித்தார். போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது. போட்டில் வெற்றி பெற்றவர்களுக்கு விரைவில் பரிசுகள் வழங்கப்பட உள்ளதாக  ஒருங்கிணைப்பாளர் அருண் தெரிவித்தார். இதில் நிகழ்ச்சி ஏற்பாடுகளை கன்னிகா பரமேஸ்வரி மொபைல் மற்றும் வாசவி கிளப் டிரஸ்ட் தலைவர் ரமேஷ் பாபு செய்திருந்தார்.
0Shares

Leave a Reply