மதுரை ஆட்சியர் குறைதீர்க்கும் முகாமில் பாஜகவினர் மனு

Loading

மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு 960 கோடி ரூபாயை மோடி அவர்கள் தலைமையில் செயல்படும் மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது. அதில் 860 கோடி ரூபாய் செலவு செய்ய பட்டுள்ளது என்று மதுரை மாநகராட்சி சார்பில் பாரதிய ஜனதா கட்சி மாநகர் மாவட்ட தலைவர் தாமரை சேவகன் மகா சுசீந்திரன் அவர்களுக்கு தகவல் அறியும் உரிமை சட்ட படி தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது. ஆனால் ஸ்மார்ட் சிட்டி திட்டம் நிறைவேற்றப் பட்ட எந்த இடத்திலும் மத்திய  அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டம் என்று எதுவும் குறிப்பிடப்பட வில்லை. ஆகவே அனைத்து இடங்களிலும் மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டம் என்று விளம்பரம் செய்யும் படியும், அனைத்து VAO, தாசில்தார், யூனியன் மற்றும் கலெக்டர் அலுவலகங்களில் மத்திய அரசின் நலத் திட்டங்களை பொது மக்களின் பார்வையில் படும்படி நிறுவ வேண்டுமெனவும் மாநகர் மாவட்ட தலைவர் மகாசுசீந்திரன் சார்பில் மாவட்ட பொருளாளர் ராஜ்குமார் தலைமையில் கலெக்டர் குறை தீர்க்கும் நாளில் மனு அளிக்கப்பட்டது. உடன் பொருளாதார பிரிவு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் முத்துக்குமார் மற்றும் நிர்வாகிகள் உடன் உள்ளனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *