தைப்பூச ஒன்பதாம் திருநாளில் திருத்தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

Loading

தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பண்பொழி அருள்மிகு திருமலைக்குமாரசாமி திருக்கோவில் தைப்பூச ஒன்பதாம் திருநாளில் திருத்தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. திருத்தேரில் எழுந்தருளிய திருமலைக்குமாரசாமிக்கு தீப ஆராதனைகள் நடைபெற்றது. திருக்கோவில் தலைமை அர்ச்சகர் திருமேனிநாத பட்டர் மற்றும் அர்ச்சகர் குழுவினர் பூஜைகளை நடத்தினர்.  ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா அரோகரா என பக்தி முழக்கமிட்டு திருத்தேர் வடம்பிடித்து இழுத்து வந்தனர். நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்து மதியம் திருத்தேர் தேர்நிலையை வந்தடைந்தது. கரிசல் குடியிருப்பு தேவர் சமுதாயம் சார்பில் பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. செங்கோட்டை,  கடையநல்லூர் தீயணைப்பு நிலையத்தினரும் அச்சன்புதூர் காவல் நிலையத்தினரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *