ராமநாதபுரத்தில் விழிப்புணர்வு நடைப்பயணம் கூடுதல் ஆட்சியர் பங்கேற்பு

Loading

ராமநாதபுரம், ஜன.29- ராமநாதபுரம் மாவட்ட சமூக நலத்துறை, தான்  பவுண்டேஷன் சார்பில்  வாக்கத்தான்  விழிப்புணர்வு நடைப்பயணம்  நடந்தது.  கூடுதல் ஆட்சியர் பிரவீன் குமார் துவக்கி வைத்து  பங்கேற்றார்.  தானம் அறக்கட்டளை  தலைவர் வெள்ளையப்பன், செயலாளர் செல்வபாண்டியன், அறக்கட்டளை சார்பு நிறுவனங்களின் விவசாயிகள், பெண்கள், மீனவர்கள், கல்லூரி, பள்ளி மாணவ, மாணவிகள்  கலந்து கொண்டனர்.  ஊழலற்ற சமூகம் எங்கும் சமத்துவம் மற்றும் எதிலும் அறம்
போன்ற கருத்துகள் பேரணியில் வலியுறுத்தப்பட்டன. புதிய பேருந்து நிலையம் பகுதியில் நிறைவடைந்தது.
 மாவட்ட சமூக நல அலுவலர் சாந்தி, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் விசுபாவதி, தான்
பவுண்டேஷன் நிறுவன உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *