சிவகங்கை மாவட்டம் கீழக்கோட்டையில் *தேசிய வாக்காளர் தின கொண்டாட்டம்

Loading

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கீழக்கோட்டையில் தேசிய வாக்காளர் தின விழா கொண்டாடப்பட்டது. தலைமை ஆசிரியை தெய்வானை தலைமை வகித்தார். வாக்காளர் சேர்ப்பு அலுவலர் ராமதிலகம், வாக்காளர் அறிமுக அலுவலர் சத்யா முன்னிலை வகித்தனர். கணித பட்டதாரி ஆசிரியை மீனாட்சி வரவேற்புரையாற்றினார். அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ஆரோக்கியசாமி வாக்காளர்களின் உறுதிமொழி வாசிக்க அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். மாதிரி தேர்தலானது தேர்தல் அலுவலர்களால் வாக்குச்சீட்டு மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்டு, அவர்கள் வாக்களித்து வாக்கு பெட்டியில் செலுத்தினார்கள். மாணவ மாணவிகள் தேர்தலில் பங்குபெற்றதை எண்ணி மகிழ்ந்தார்கள். “வாக்களிப்பதே சிறந்தது. நிச்சயம் வாக்களிப்பேன்” என்ற முழக்கத்தோடு தங்களது பெற்றோர்கள், சகோதர சகோதரிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த கேட்டுக்கொள்ளப்பட்டது. 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருந்தால் படிவம் 6 யைப் பயன்படுத்தி வாக்காளர் பெயரை சேர்த்து ஓட்டுரிமையை பெற்றுக்கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஆசிரியை கமலாபாய் நன்றி கூறினார். ஆசிரியர்கள் ராஜபாண்டி, அமலதீபா கலந்து கொண்டார்கள்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *