வேலூரில் காங்கிரஸ் கட்சியினர் தமிழக ஆளுநர் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

Loading

வேலூர் மாநகர் அண்ணா கலையரங்கம் அருகாமையில் காங்கிரஸ் கட்சியினர் வேலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் டிகா ராமன், தலைமையில் தமிழக ஆளுநரை கண்டித்து கண்டனம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சி ஓ.பி.சி பிரிவு மாவட்ட தலைவர் நோபல் லிவிங்ஸ்டன், மற்றும் ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து செய்தி அவர்களிடம் பேசிய மாவட்ட தலைவர் டிகா ராமன், தமிழக ஆளுநர் பதவி ஏற்ற நாளிலிருந்து இதுவரை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசை தொடர்ந்து அவமானப்படுத்தும் விதமாக செயல்பட்டு வருகிறார். மேலும் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை மீறியும் தமிழக மக்களின் கலாச்சார பண்பாட்டை கொச்சைப்படுத்தும் விதமாக அவருடைய செயல்பாடு அமைந்துள்ளது இதனை தமிழக ஆளுநர் நிறுத்திக் கொள்ள வேண்டும் இதே போன்று செயல் தொடர்ந்து நீடிக்கும் பட்சத்தில் வேலூர் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபடுவோம் என கூறினார்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *