இன்றைய ராசிபலன்

Loading

மேஷம்

இன்று எதிலும் பொறுமையுடனும் சிந்தித்தும் செயல்படவேண்டிய நாள். முக்கிய முடிவுகள் எடுப்பதைக் கண்டிப்பாகத் தவிர்த்துவிடவும். உறவினர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். வாழ்க்கைத்துணையுடன் இணக்கமாக நடந்துகொள்வது அவ சியம். பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும் அனுசரித்துச் செல்லவும். வியாபாரத்தில் சில சங்கடங் களை எதிர்கொள்ள நேரிடும். விநாயகரை வழிபடுவதன் மூலம் அனுகூலப் பலன்களைப் பெறலாம்.அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல்நலனில் கவனமாக இருக்கவும்.பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் தாமதமாகும்.கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் ஆதாயம் கிடைக்கும்.

ரிஷபம்

புதிய முயற்சிகள் சாதகமாகும். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு. குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகளில் வாழ்க்கைத்துணையின் ஆலோசனை அவசியம். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். சிலருக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. வியாபாரம் வழக்கம்போல் நடைபெறும். முருகப் பெருமானை வழிபட நன்மைகள் கூடும்.கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தையுடன் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.

மிதுனம்

மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். துணிச்சலாக முடிவெடுப்பீர்கள். எதிர்ப்புகளும் இடையூறுகளும் நீங்கும். சகோதரர்கள் மூலம் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது. பிள்ளைகள் ஆலோசனை கேட்டு வருவார்கள். பிற்பகலுக்கு மேல் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட உபத்திரவங்கள் நீங்கும். சிவபெருமானை வழிபட்டு இன்றைய நாளைத் தொடங்க நன்மைகள் அதிகரிக்கும்.மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தெய்வ வழிபாடுகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள்.புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும்.

கடகம்

புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. தாய்வழி உறவினர்கள் மூலம் குடும்பத்தில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகளால் தேவையற்ற செலவுகள் ஏற்படும். சிலருக்கு அதிகரிக்கும் பணிச்சுமையின் காரணமாக உடல் அசதி ஏற்படக்கூடும். வியாபாரத்தில் பிற்பகலுக்கு மேல் விற்பனை விறுவிறுப் பாக நடப்பதுடன், லாபமும் கூடுதலாகக் கிடைக்கும். அம்பிகையை தியானிக்க மகிழ்ச்சி நிலவும்.புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது.பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் சுபச் செலவுகள் ஏற்படக்கூடும்.ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் சில சங்கடங்கள் உண்டாகும்.

சிம்மம்

எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். முக்கியப் பிரமுகர் மூலம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் கனிவான அணுகுமுறை அவசியம். இன்று தட்சிணாமூர்த்தியை வழிபட நற்பலன்கள் அதிகரிக்கும்.மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தாயாருடன் அனுசரணையாக நடந்துகொள்வது அவசியம்.பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் காரிய அனுகூலம் உண்டாகும்.உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுக்குக் கொடுத்த கடன் திரும்பக் கிடைக்க வாய்ப்பு உண்டு.

கன்னி

தேவையான பணம் இருப்பதால் செலவுகளைச் சமாளித்துவிடுவீர்கள். உறவினர்கள் ஆலோசனை கேட்டு வருவார்கள். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த மனக் கசப்புகள் நீங்கி, அந்நியோன்யம் அதிகரிக்கும். தாய்மாமன் வழியில் சுபச்செலவு ஏற்படும். சகோதரர் களால் சங்கடங்கள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாகக் கிடைப்பது மகிழ்ச்சி தரும். இன்று நீங்கள் மகாலட்சுமியை வழிபட நற்பலன்கள் அதிகரிக்கும்.உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தையின் தேவையைப் பூர்த்தி செய்து மகிழும் வாய்ப்பு ஏற்படும்.அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தொடங்கும் காரியங்கள் வெற்றிகரமாக நிறைவேறும்.சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அனைத்து விஷயங்களிலும் பொறுமையைக் கடைப் பிடிப்பது நல்லது.

துலாம்

பல வகைகளிலும் அனுகூலமான நாளாக இருக்கும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். தந்தையிடம் எதிர்பார்த்த பணஉதவி கிடைக்கும். பிள்ளைகள் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. நண்பர்களுடன் வீண் விவாதம் செய்வதைத் தவிர்ப்பது அவசியம். வாழ்க்கைத்துணையின் முயற்சிக்கு ஒத்துழைப்பு தருவீர்கள். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். இன்று லட்சுமி நரசிம்மரை வழிபட நற்பலன்கள் அதிகரிக்கும்.சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும்.விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரில் இருந்து எதிர்பார்த்த செய்தி கிடைக்கும்.

விருச்சிகம்

 

மனதுக்கு மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நிகழும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. தாய்மாமன்வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். பெற்றோர்கள் இணக்கமாக இருப்பார்கள். மன உறுதியுடன் செயல்படுவீர்கள். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் பங்குதாரர்களால் சிற்சில சங்கடங்கள் ஏற்படக் கூடும். ஆறுமுகக் கடவுளை வழிபடுவதன் மூலம் நன்மைகள் கூடுதலாக நடைபெறும்.விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் காரிய அனுகூலம் உண்டாகும்.அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் வகையில் செலவுகள் ஏற்படக்கூடும்.கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

தனுசு

எதிர்பார்த்த பணவரவு இருந்தாலும், திடீர் செலவுகளும் ஏற்படும். பிள்ளை களால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். தந்தைவழி உறவினர்களுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால் சற்று எச்சரிக்கையாக நடந்துகொள்வது அவசியம். பிற்பகலுக்கு மேல் உடல் ஆரோக்கியத் தில் கவனம் செலுத்தவும். வியாபாரத்தில் பணியாளர்களால் தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடும். இன்று அம்பிகையை தியானித்து நாளைத் தொடங்குவதன் மூலம் சிரமங்கள் நீங்கும்.மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியிடங்களில் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தையுடன் அனுசரணையாக இருப்பது அவசியம்.உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.

மகரம்

மகிழ்ச்சியான நாள். குடும்பப் பொறுப்புகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். பிள்ளைகள் கேட்பதை வாங்கித் தந்து அவர்களை உற்சாகப்படுத்துவீர்கள். உங்கள் முயற்சிக்கு பெற் றோரின் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. தந்தையுடன் பேசும்போது பொறுமை அவசியம். அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வியாபாரம் எப்போதும்போல் நடைபெறும். மகாவிஷ்ணுவை வழிபட, மகிழ்ச்சி கூடுதலாகும்.உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் யோசித்து ஈடுபடுவது நல்லது.அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் வீண் விவாதத்தில் ஈடுபடவேண்டாம்.

கும்பம்

தொடங்கும் காரியங்கள் சாதகமாக முடியும். சிலருக்கு திடீர் செலவுகளால் கையிருப்பு குறையும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எதுவும் இன்று எடுக்க வேண்டாம். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். அரசாங்க வகையில் இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக முடியும். தந்தையிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வியாபாரத்தில் வழக்கமான நிலையே காணப்படுகிறது. ஆஞ்சநேயரை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படக்கூடும்.பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தைவழியில் சில சங்கடங்கள் ஏற்படும்.

மீனம்

குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதில் பெரியவர்களின் ஆலோ சனை அவசியம். வாழ்க்கைத்துணையால் ஆதா யம் கிடைக்க வாய்ப்பு உண்டு. சிலருக்கு திடீர் செலவுகளுக்கு வாய்ப்பு உள்ளது. சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். நண்பர்கள் அனுசரணை யாக இருப்பார்கள். வியாபாரத்தில் சக வியாபாரிகளுடன் வீண் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பொறுமை அவசியம். விநாயகரை வழிபட புதிய முயற்சிகள் அனுகூலமாகும்.பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் பெருமையும் மகிழ்ச்சியும் ஏற்படும்.ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன் வாங்குவதைக் கண்டிப்பாகத் தவிர்த்துவிடவும்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *